புதன், 24 ஆகஸ்ட், 2011

சவூதியில் இஸ்லாத்தை தழுவினார் முரளி



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!

சவூதியில் இஸ்லாத்தை தழுவினார் முரளி...............!!

அல்கஸீம் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 19.08.2011 அன்று புரைதா மர்கசில் ரமலானின் இறுதி பத்து நாட்கள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலைச்சேர்ந்த முரளி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்.

முரளி என்ற தன்பெயரை முபாரக் அலி என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை பற்றியும் , முக்கியமான ஐந்து கடமைகள் பற்றியும் எடுத்துக்கூறி அது சம்பந்தமான சி,டி,மற்றும் குர்ஆன் தர்ஜுமா வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.........!!