திங்கள், 30 மார்ச், 2009

முஸ்லீம்களுக்காக துஆ செய்யுங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

நம்பிக்கை கொண்ட ஆண்களையும்> பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 85:10>

அநியாயம் இழைக்கும் ஒரு சமுதாயத்தை இறைவன் முழவதுமாக அழிக்க நாடினால் அந்த சமுதாயத்தை அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டு அநியாயமும்> அட்டூழியமும் செய்து குற்றத்தை அதிகப்படுத்த விடுவான்.

அத்துடன் அவர்கள் மீதான அவனுடையப; பிடி இறுகுவதற்கான காலக்கெடுவையும் விதித்து விடுவான். அதுவரை அவர்களால் முடிந்தவரை அத்து மீறிக் கொண்டே இருப்பார்கள்.

அவனது இறுதிப்பிடிக்கு முன் அந்த சமுதாயத்திற்கு படிப்பினைக்காக பஞ்சத்தை ஏற்படுத்துவான் அதிலும் அவர்கள் படிப்பினைப் பெறாவிடில் தனது பிடியை இறுக்குவான் அதிலிருந்து அவர்கள் மீள முடியாது.

அவனுடைய அந்தப் பிடிக்குள் இறுகி அந்த சமுதாயம் சிக்கி சின்;னாப்பின்னமாகி அதனுடைய நிலைமை தலைகீழாகப்புரண்டுவிடும். ....அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும் நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்து மீறலில் விட்டு விடுவோம்.10:11

ஈராக்> ஆப்கான்> பலஸ்தீனப் பகுதிகளுக்குள் அத்து மீறி சென்று அப்பாவி மக்களின் மீது குண்டுகளை வீசியும்> துப்பாக்கியால் சுட்டும் வீழ்த்துகின்றவர்களின் சொந்த நாட்டு மக்களுடைய இன்றைய நிலை என்னத் தெரியுமா ?

வெளியிலிருந்து வந்து யாரும் அவர்களின் மீது குண்டு வீசவோ> துப்பாக்கியால் சுடவேண்டிய அவசியமோ இல்லாத அளவுக்கு தங்களைத் தாங்களே சுட்டு மடித்துக் கொள்ளும் அவல நிலையை இறைவன் ஏற்படுத்தினான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியினால் அமெரிக்கர்களின் கடன் அதிகரித்து அதை அடைக்; முடியாமல் வீடுகளை இழந்து வீதிக்கு வர வெட்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டு மடித்துக் கொண்டனர் இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இறைவன் அவர்கள் மீது ஏற்படுத்திய இந்தப் பஞ்சத்தின் மூலம் படிப்பினைப் பெற்று பிற சமுதாயத்தை நசுக்குவதிலிருந்து பின் வாங்கவில்லை எனில் இறைக்கட்டளைப் படி அவர்கள் மீது இறைவனுடையப பிடி இறுகுவதை யாரும் தடுக்க முடியாது.

அரபு நாடுகளிடமிருந்து ஏராளமான நிதியுதவி அமெரிக்காவுக்கு சந்து வழியாக அனுப்பப்படுவதினாலும்> ஏற்கனவே அரபு நாட்டு எண்ணெய் ஏற்றுமதியில் இலவச விகிதாச்சார பகல் கொள்ளையினாலும் அமெரிக்காவுக்கு முட்டுக் கொடுத்து நிருத்தப்பட்டுள்ளது.

இது எவ்வளவு நாள் நீடிக்கும் இறைவன் விதித்த காலக்கெடு வந்து விட்டால் அரபு நாடுகள் மட்டுமல்லாது மொத்த உலகமே தங்களது பொருளாதாரத்தைக் கொட்டி முட்டுக் கொடுக்க முயன்றாலும் முடியாது. உமது இறைவனின் பிடி கடுமையானது. திருக்குர்ஆன் 85:12

அமெரிக்காவுடைய இன்றைய இந்த நிலமையைக் கண்டு உலகில் எந்த மக்களும் ஐயோப் பாவமே! என்று சொல்ல வில்லை மாறாக சந்தோஷம் அடைகின்றனர் காரணம் அவர்களுடைய ‘’ ஹிரோஷிமா’’ மீது அணுகுண்டு வீசியதிலிருந்து இன்றைய பலஸ்தீன தாக்குதல் வரை மக்கள் அவர்களுடைய அடாவடித் தனத்தைக் கண்டு வருவதால் அவர்களின் மீது அனுதாபம் ஏற்படவில்லை.

அமெரிககாவினுடைய அடுத்த கோர முகம் தான் இஸ்ரேல் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த இரட்டை கோரமுகத்தையும் இறைவன் அழித்தொழிக்கும் காலம் விரைவில் வரும்.

அதற்காக நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அழுது மன்றாடி இறைஞ்சுவதிலிருந்து பின் வாங்கி விட வேண்டாம்.

இறைவன் அறிந்தவன் இறைவன் மீது பொறுப்பு சாட்டுங்கள்

தொடர்ந்து இரண்டு நாட்களாக அநியாயமாக கொல்லப்பட்ட பலஸ்தீன சகோதர> சகோதரிகளுடைய மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தியுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி, மினல் முஃமினீன வல் முஸ்லிமீன, இன்னா இன்ஷா அல்லாஹூ பிகும் லாஹிகூன (வயர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தாஹிரீன) அஸாலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியத்த
பொருள் :விசுவாசிகள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள வீடுகளை உடையோரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களோடு வந்து சேரக்கூடியவர்கள், (நம்மில் முந்தியவர்களுக்கும், நம்மில் பிந்துகிறவர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகத்தைக் கேட்கிறேன். அறிவிப்பாளர்: புரைதா(ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம், இப்னுமாஜா

அவர்களுடைய திடீர் பிரிவால் வாடி வதங்கும் அவர்களுடைய பச்சிளங் குழந்தைகளுடைய எதிர் காலத்துக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

அநீதியாளர்களை அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள் அல்லாஹ்வின் கடுமையானது

உமது இறைவனின் பிடி கடுமையானது. திருக்குர்ஆன் 85:12

அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. திருக்குர்ஆன் 51:44

அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை> அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. திருக்குர்ஆன் 51: 45

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

முஸ்லிம்களிடையே பகைமைத் தீ!


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் - வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை".
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.

இங்கு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இபாதத் எனும் சொல் வழிபாட்டை குறிப்பதில்லை. ஏனெனில், யாராவது ஷைத்தானுக்குச் சிலையோ உருவமோ வடித்து அதனை வணங்குவதாக இதுவரை எங்கும் கேள்விப்படவில்லை. மாறாக, இபாதத் என்பது இந்த இடத்தில் விரிவான பொருளைக் கொண்டுள்ளது. அதாவது, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஷைத்தானின் விருப்பங்களுக்கு ஏற்ப நடப்பது என்பது தான் அது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றது.

"என் தந்தையே! ஷைத்தானுக்கு வழிபடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான்". (திருமறை 19:44)

கவனத்தில் கொள்ளவும்:

இந்த ஹதீஸில் இறைத்தூதர் பயன்படுத்தியுள்ள தொழுகையாளிகள் எனும் சொல் தொழுகையை முறையாகப் பேணி வருபவர்களைக் குறிக்கும். அவ்வாறுத் தொழுகையைப் பேணி வருவதால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பும் அச்சமும் நிறைந்திருக்கும். இத்தகைய மக்களுக்கு எதிராக ஷைத்தானின் சூழ்ச்சி செல்லுபடியாகமாட்டா! அதாவது இவர்கள் ஒருபோதும் ஷைத்தானை வழிபட மாட்டார்கள். மேலும் இத்தொழுகையாளிகள் அவனுடைய விருப்பங்களின் படி நடக்கவும் மாட்டார்கள்! எனினும் அவர்களிடையே பரஸ்பரம் தவறான எண்ணங்களை உருவாக்கி அந்தத் தொழுகையாளிகளிடையே மோதலையும் முரண்பாட்டையும் ஷைத்தானால் ஏற்படுத்தி விட முடியும்.

தொழுகையை முறையாகப் பேணி வரும் தொழுகையாளிகளான முஸ்லிம்களில் அதுவும் இறை மார்க்கத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் போட்டி போட்டுச் செயல்படும் சகோதரர்களிடையே இத்தகைய மோதலும் முரண்பாடும் பரவலாகக் காணப்படுவதைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் அஞ்சிய இத்தகைய பிளவு நிலையை விட்டு முஸ்லிம்களை இறைவன் காத்தருள்வானாக.


நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் தன் அருளை அதிகமாக்குகிறான்

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். - ஸூரா நஹ்ல்:18 ]

ஓவ்வொரு மனிதனும் அவனது வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் இறைவனை சார்ந்தே இருக்கிறான். அவன் சுவாசிக்கும் காற்றிலிருந்து அவன் உண்ணும் உணவு வரையும் - பேசும் பொழுது அவன் உபயோகிக்கும் கை அசைவுகள் முதல் - ஆனதந்தமான நேரங்களிலும் இறைவன் அவனுக்காக படைத்து கொடுப்பவற்றிலும் சார்ந்தே இருக்கிறான்.

இருப்பினும் பெரும்பாலனவர்கள் அவனது குறைகளை உணராமலும் அவர்கள் இறைவனிடத்தில் தேவையுள்ளவர்களாக இருப்பதையும் உணராமலும் இருக்கின்றான். எதேச்சையான நிகழ்வுகள் அல்லது அவனது கடின உழைப்பால் அனைத்தையும் பெற்று கொண்டதாக நினைக்கிறான். இது ஒரு பெரிய தவறாகும். மேலும் இவை இறைவனுக்கு எதிரான நன்றி கெட்ட தனமாக கருதப்படுகிறது. ஒரு முக்கியமில்லாத சிறு பரிசு பொருளுக்காக மனிதர்கள் நன்றி செலுத்துகிறார்கள். ஆனால் இறைவன் அவனுக்கு கொடுத்த எண்ண முடியாத அருள்களுக்கு நன்றி செலுத்தாமல் அவனது வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கிறான். இறைவனது அருள்களை எண்ணி முடிக்க முடியாது.

இதை பற்றி இறைவன் கூறும்பொழுது,

'இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (ஸூரா நஹ்ல்:18)

இருப்பினும் மனிதர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ள அருள்களுக்கு நன்றி செலுத்துவதில்லை. இதற்கான காரணத்தை குர்ஆன் கூறுகிறது : இறைவனது பாதையிலிருந்து மனிதர்களை வழிக்கெடுப்பதை குறிக்கோளாக கொண்ட ஷைத்தான்- அவனது முக்கிய குறிக்கோள் மக்களை நன்றி கெட்டவர்களாக மாற்றுவது தான் என்று கூறினான். ஷைத்தானின் இந்த கூற்றானது இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்¢ ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்" (என்றும் கூறினான்). அதற்கு இறைவன், 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான் (ஸூரா அல்-ஆரப்: 17-18)

மறுபுறத்தில் ஏக இறைவனை விசுவாசிப்பவர்கள் தங்களது குறைபாடுகளை அறிந்து இறைவனுக்கு முன்னால் பணிந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அருளுக்கும் நன்றி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்து சுகங்களுக்காக மாத்திரம் விசுவாசிகள் நன்றி செலுத்துவதில்லை. அனைத்து பொருட்களினதும் படைப்பாளனும் சொந்தக்காரனும் இறைவன் என்பதை உணர்ந்த விசுவாசி அவனது நல்ல ஆரோக்கியம் - அழகு - அறிவு விசுவாசத்தின் மீதான அன்பு - நிராகரிப்பு மீதான வெறுப்பு - சிந்திக்கும் ஆற்றல் மற்றும் அதிகாரம் அனைத்திற்கும் நன்றி செலுத்துகின்றான். அவன் சரியான பாதையில் இருப்பதனாலும் விசுவாசிளுடன் சேர்த்து வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒரு அழகான இடம் - அவர்களது காரியங்கள் இலகுவாக முடிவடைவது - அவர்களது ஆசைகள் நிறைவேறுவது - இன்பகரமான செய்திகளை அறிவது - மரியாதையான செயல்கள் அல்லது மற்ற அருட்கொடைகளானது விசுவாசியை உடனே இறைவன் பக்கம் திருப்புவதோடு அவனுக்கு நன்றி செலுத்தி அவனது கருணைக்காக காத்திருக்கிறான்.

நன்னடத்தைகளுக்காக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அன்பளிப்பு காத்திருக்கிறது. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரசியங்களில் இதுவும் ஒன்றாகும். நன்றி செலுத்துபவர்களுக்கு இறைவன் அவனது அருள்களை அதிகரிக்கிறான். உதாரணமாக எவர்கள் தங்களிடமுள்ள ஆரோக்கியத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது ஆரோக்கியத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்கிறான.; எவர்கள் தங்களிடமுள்ள அறிவிற்காகவும் சொத்துகளுக்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது அறிவையும் சொத்துகளையும் அதிகரிக்க செய்கிறான். இதற்கு காரணம் அவர்கள் இறைவன் கொடுத்தவற்றை திருப்தியடைவதோடு இறைவனது அருள்களை பொருந்தி இறைவனை அவர்களது நண்பனாக எடுத்து கொள்வதலாகும். இதை பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்
¢ (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (ஸூரா இபுறாஹீம் : 7)

நன்றி செலுத்துவதானது இறைவனுக்கு நெருக்கமாகவும் அவனை நண்பனாக எடுத்த கொள்வதற்கான அறிகுறியாகும். நன்றி செலுத்துபவர்களிடம் இறைவன் படைத்துள்ள அருள்கள் மற்றும் அழகுகளை காணும் தன்மை காணப்படுகின்றது. இறைவனின் தூதர் இதை பற்றி கூறுகையில்

இறைவன் உங்களுக்கு சொத்துகளை கொடுக்கும் பொழுது இறைவனது அருள்கள் உங்கள் மீது பிரதிபளிக்கிறது.

மறுபுறத்தில் ஏக இறைவனை நிராகரிக்கும் அல்லது நன்றி கெட்ட மனிதன் எந்த ஒரு அழகான சூழலில் குறைகளை மட்டுமே தேடுவான். ஆகவே அவனிடம் துக்கமும் விரக்தியும் காணப்படும். உண்மையில் இறைவனது படைப்புகளின் காணப்படும் இறை நியதியின் காரணமாக அத்தகைய மக்கள் எப்பொழுதும் வெறுக்கத்தக்க நிகழ்வுகளை சந்திப்பார்கள். மறுபுறத்தில் எவர்களிடம் உண்மையான நோக்கமும் சிந்திக்கும் சக்தியும் இருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் அவனது அருட்கொடைகளை அதிகரிக்கிறான்.

நன்றியுள்ளவர்களுக்கு இறைவன் அருள்களை அதிகப்படுத்துவது குர்ஆனில் காணப்படும் இரசியமாகும். இருப்பினும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு கபடமற்ற உண்மையான நிலை மிக முக்கியமாகும். இறைவனது எண்ணிலடங்காத அருள்களையும் இரக்கத்தையும் உண்மையாக மனதால் சிந்திக்காமல் நன்றி செலுத்துவதானது அது மக்கள் மனங்களை மட்டும் கவருமே தவிர உள்ளங்களை அறிந்த இறைவனை பொருத்தவரையில் இதுவும் நன்றிகெட்டதனமாகும்.

பொய்யான உள்நோக்களை கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை மறைத்து கொள்ளலாம். ஆனால் இறைவனிடம் அது முடியாது. அத்தகயவர்கள் அவர்களது நன்றியை இலகுவான நேரங்களில் அழுத்தமாக தெரிவித்த போதும் அதில் எந்த பயனுமில்லை. ஏனெனில் கடினமான துன்பமான நேரங்களில் அவர்கள் மிக இலகுவாக நன்றிகெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

உண்மையான விசுவாசிகள் கடினமான நேரங்களிலும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். விசுவாசிகளிடம் இருந்து அருள்கள் குறைவடைவதை வெளியிலிருப்பவர்கள் காண்பார்கள். இருப்பினும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் நன்மையென கருதும் விசுவாசிகள் இதிலும் நன்மையையே காண்பார்கள். உதாரணமாக இறைவன் பயத்தையும் பசியையும் சொத்துகளை இழப்பதையும் அல்லது உயிர்பலிகளையும் கொண்டு மக்களை சோதிப்பதாக கூறுகிறான்.

அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் நம்பிக்கையாளன் பொருந்தி கொண்டு நன்றிசெலுத்துகிறான். காரணம் இந்த பரீட்சையில் அவனது உறுதியின் காரணமாக இறைவன் தருவதாக வாக்களித்த சுவர்க்கத்தை பெற்று கொள்ளலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலாகும். இறைவன் எந்த ஒரு மனிதனையும் அவனது சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய உறுதியும் கீழ்படிதலும் ஒருவரை பொறுமை மற்றும் நன்றிசெலுத்துவதின் பால் கொண்டு செல்லுகிறது. அதனால் குறைவற்ற அர்பணிப்பும் கீழ்படிதலும் நம்பிக்கையாளின் பண்பாக இருப்பதால் இறைவன் அவனது நன்றியுள்ள அடிமையானுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அவனது அருளையும் இரக்கத்தையும் அதிகரிப்பதாக வாக்களிக்கின்றான்.

'Jazaakallaahu khairan' ஹாருன் யஹ்யா



இரண்டு கிழக்குகளுக்கும்-இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்! எப்படி?

கேள்வி: இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு - ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் - இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.

பதில்: 1. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.

அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனம் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று கூறுகிறது.

'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17)

அருள்மறை குர்ஆனில் இரண்டு மேல்திசைகள், இரண்டு கீழ்திசைகள் என பொருள்படும் (Dual) அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி வார்த்தைகள் அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் - இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று பொருள் கொள்ள வைக்கிறது.

பதில்: 2. அல்லாஹ் - அவனே இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இறைவன்.

சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கிறது என்பது புவியியல் அறிவு நமக்கு கற்றுத் தந்த பாடம். ஆனால் சூரியன் உதிக்கும் நிலை (Point of Sunrise) வருடம் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும். வருடத்தின் இரண்டு நாட்களில் மாத்திரம் - அதாவது சூரியன் நில நடுக்கோட்டை கடந்து செல்லும் அந்த இரண்டு நாட்களில் மாத்திரம், சூரியன் கிழக்குத் திசையின் சரியான நிலையிலிருந்து (மத்தியில் இருந்து) உதயமாகிறது. வருடத்தின் மற்ற நாட்களில் சூரியன் உதிப்பது கிழக்குத் திசையின் சற்று வடக்கிலிருந்தோ அல்லது கிழக்குத் திசையின் சற்று தெற்கிலிருந்தோதான் உதிக்கிறது.

கோடைகாலத்தின் உச்சக்கட்டம் வரும் பொழுது (ஜுன் மாதம் 21 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத்திசைக்கு அதிகபட்ச வடக்குப் பகுதியிலும், குளிர் காலத்தின் உச்சக் கட்டம் வரும் பொழுது ( டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி என்று கணக்கிடப்பட்டுள்ளது) கிழக்குத் திசைக்கு அதிகபட்ச தெற்குப் பகுதியிலும் சூரியன் உதிப்பதை நாம் நேரடியாக காணலாம்.

அதேபோல சூரியன் மேற்குத் திசையில் மறையும் போதும் மேற்குத் திசையின் அதிக பட்ச வடக்குப் பகுதியிலும், மேற்குத் திசையின் அதிக பட்ச தெற்குப் பகுதியிலும் மறைவதை காணலாம். மேற்படி இயற்கையின் செயலை, சூரியன் உதிப்பதையும் - மறைவதையும் காண்பதற்கு வசதியான இடங்களில் இருந்து நாம் எளிதாக காண முடியும்.

இவ்வாறு சூரியன் வருடம் முழுவதும் கிழக்குத் திசையின் ஒரே மையத்திலிருந்து உதிக்காமல் கிழக்குத் திசைக்கு சற்று வடக்குப் பகுதியிலிருந்தும், கிழக்குத் திசைக்கு சற்று தெற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குத் திசையின் பல மையங்களிலிருந்து உதிப்பதையும், அதே போன்று மேற்குத் திசையின் பல மையங்களில் அடைவதையும் பார்க்கிறோம். மேற்படி செயல், குர்ஆனில் சொல்லப்பட்ட 'இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.'(அல் குர்ஆன் 55:17) என்கிற வசனத்தை உண்மை படுத்துவதை தெளிவாக உணர முடியும்.

பதில்: 3. அல்லாஹ் - இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இடையில் உள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் அவனே.!

அரபி மொழியில் பிற மொழிகளைப் போல் அல்லாமல் - ஒருமை (Singular) இருமை (Dual) பன்மை (Plural) (இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கை - அதாவது மூன்றும், மூன்றுக்கு மேற்பட்டதும்) என மூன்று வகையாக அமைந்துள்ளன. அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனத்தில் வரும் - 'மஷ்ரிக்கைனி' மற்றும் - 'மக்ரிபைனி' என்கிற வார்த்தைகள் இருமை (Dual) பன்மையை குறிப்பதால் - மேற்படி வசனம் இரண்டு கிழக்குகளையும், இரண்டு மேற்குகளையும் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ் - ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'எனவே
, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.' (அல் குர்ஆன் 70:40). மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'மஷ்ரிக்கி' மற்றும் 'மக்ரிபி' என்கிற அரபி வார்த்தைகளுக்கு கிழக்குத் திசைகள், மற்றும் மேற்குத் திசைகள் என்று பொருள். அதாவது மூன்று அல்லது மூன்றிக்கு மேற்பட்ட கிழக்குத் திசைகள் என்றும், மூன்றிற்கும் மேற்பட்ட மேற்குத் திசைகள் என்றும் பொருள்.

மேற்படி வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தி என்னவெனில் அல்லாஹ் - அவன் இரண்டு கிழக்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும், இரண்டு மேற்கிற்கும் இடைப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் இறைவன் என்பதுதான். தவிர இரண்டு கிழக்கிற்கும் - இரண்டு மேற்கிற்கும் இறைவனும் அவனே தான் என்பதுமாகும்.

'thanks to" -டாக்டர் ஜாக்கிர் நாய்க்.

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)

அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.

முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் எழுத்து வடிவமாக எழுதி வைத்துச் சென்றார்களே; இரண்டாவதாகத் தொகுப்பதற்கு என்ன அவசியம்? என்று சந்தேகம் எழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவத்தில் பதிவு செய்தார்கள் என்றாலும், அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்று புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு அதனை நபித்தோழர்கள் மனனம் செய்து கொள்வார்கள். ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் அடுத்தது எது என்பதை மனனம் செய்தவர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள்.

மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள்.

தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் ''இது இந்த அத்தியாயத்தைச் சேர்ந்தது; இது இந்த வசனத்திற்கு அடுத்து வரவேண்டியது; இது இந்த வசனத்திற்கு முன்னால் வைக்க வேண்டியது'' என்று வரிசைப்படுத்தினார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் வசனங்களையும் வரிசைப்படுத்தி அத்தியாயங்களை தொகுத்தார்களே தவிர, இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது, இது மூன்றாவது அத்தியாயம் என்று வரிசைப்படுத்தவில்லை.
இந்த பாதுகாக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில்...
.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய அந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் ''இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
.
குர்ஆனுடைய அத்தியாயங்களை ''இது முதல் அத்தியாயம்; இது இரண்டாவது அத்தியாயம்; இது மூன்றாவது அத்தியாயம்'' என்று வரிசைப்படுத்துகின்ற பணியை அவர்கள் தான் செய்தார்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை. எது முதலில் இருந்தாலும், எது இடையில் இருந்தாலும், எது இறுதியில் இருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதே இதற்குக் காரணம். (நூல்: புகாரி லி 4993)

உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். ''இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி னார்கள்.

சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.

இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதி எடுத்தல்
.
மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் ''இஸ்தன்புல்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் ''தாஷ்கண்ட்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.
.
அத்தியாயங்களை உஸ்மான்(ரலி) தான் வரிசைப்படுத்தினார்
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் பைஹகீ என்ற அறிஞர் முக்கியமானவர். ஆனால் இவர் தனது கூற்றுக்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.

அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது இப்போதைய குர்ஆனில் இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்படி இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவர்களின் வரிசைக்கும் இடையே ஏராளமான மாற்றங்கள் இருந்தன.

உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆல இம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித் தோழர்கள் பல வரிசைப் படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப் படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை.

எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவது தான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.
.
சமுதாயத்தின் அங்கீகாரம்
.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.

இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளிலேயே குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)

நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டது என்பதை முன்னுரையில் விளக்கியுள்ளோம். திருக்குர்ஆன் எவ்வாறு தொகுத்து பாதுகாக்கப்பட்டது என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்ப கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச்
சொல்லப்பட்டது. (திருக்குர்ஆன் 75:16, 20:14)

''திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.

இன்னொரு வசனத்தில் ''உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

நபித்தோழர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ, அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.

பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காண்கிறோம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.

எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.

23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சர்வ சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்து விட முடியும்.

மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள். ''முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பி நடத்துகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.

திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலையும் ஏற்பட இது உதவியாக இருந்தது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களை சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.

இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக நபி வழித் தொகுப்பு நூல்களில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி 0006, 1902, 3220, 3554, 4998)

இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

குறிப்பாக
அபூபக்ர் (ரலி)

உமர் (ரலி)

உஸ்மான் (ரலி)

அலீ (ரலி)

தல்ஹா (ரலி)

ஸஅது (ரலி)

இப்னு மஸ்வூத் (ரலி)

ஹுதைஃபா (ரலி)

ஸாலிம் (ரலி)

அபூஹுரைரா (ரலி)

இப்னு உமர் (ரலி)

இப்னு அப்பாஸ் (ரலி)

அம்ர் பின் ஆஸ் (ரலி)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முஆவியா (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி)

ஆயிஷா (ரலி)

ஹஃப்ஸா (ரலி)

உம்மு ஸலமா (ரலி)

உபை பின் கஅபு (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி)

ஸைத் பின் தாபித் (ரலி)

அபூதர்தா (ரலி)

மஜ்மா பின் ஹாரிஸா (ரலி)

அனஸ் பின் மாலிக் (ரலி)

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது. (திருக்குர்ஆன் 29:49)

எழுத்து வடிவில்
கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயத்தில் இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

திருக்குர்ஆனை படிப்பதற்கு முன்...

திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?
  • அதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.

செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.

இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.

தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.

முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.

அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.

அதற்கும் மறு நாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.

இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப் படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.

இது போலவே திருக் குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.
எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் காணலாம். முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.

பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.

எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! ''இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென ''உன்னை'' என்று முன்னிலைக்கு மாறுவார்.

'இவர்' என்பதும் 'உன்னை' என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.

இது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.
''உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று ''இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.

ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.

'நீங்கள்' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து 'அவர்கள்' என்று படர்க்கைக்கு மாறும்.

திருக்குர்ஆன் பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதே இதற்குக் காணரம்.

அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.

நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது ''வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் ''வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.
இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இரு வேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.

குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே 'நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் 'நாம்' என்றே கூறுகிறான்.

தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல் வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.

'இது என் வீடு' என்று கூறும் இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.
சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது 'நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் 'நாம்', 'நம்மை', 'நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆன்லைன் பீஜே

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பொயரால் துவங்குகின்றேன்.


1. எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின் அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்.

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக.

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

- அல் குர்ஆன் - 1: 1 - 7