சனி, 26 பிப்ரவரி, 2011

நாத்திகத்தின் தோற்றம்

நாத்திகத்தின் தோற்றம்

Post image for நாத்திகத்தின் தோற்றம்

in பகுத்தறிவுவாதம்

பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் நடக்கிறது. அரிசியில் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும், மாநிலத்தின் பேராலும், மொழியின் பேராலும் மக்களுடைய உள்ளங்களில் நஞ்சைக் கலந்து மனித அமைதியைக் கெடுக்கிறார்கள். இதுவே எதார்த்த நிலை.

இதுப் போலவே கடவுள் நம்பிக்கை மனித வர்க்கத்திற்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பதால் தான், கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், அந்தக் கடவுளின் பெயரால் துணைக் கடவுள்களையும், பொய்க் கடவுள்களையும், மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் இவைப் போல் மனித சமுதாயத்தை வழிகேட்டிலும் அழிவுப் பாதையிலும் இட்டுச் செல்லும் பல தீய செயல்களையும் நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றி வருகிறார்கள். இந்தப் படுபாதகச் செயல்ளைப் பார்த்து வயிறு எரியும் சிந்தனையாளர்கள், போதிய ஆய்வுக் குறைவால் உண்மையான அந்த ஒரிறைவனையும் மறுக்கத் துணிகிறார்கள். நாத்திகர்களின் இச்செயல் எதுப் போல் இருக்கிறது என்றால், அரசியல் என்று ஒன்று இருக்கப்போய்த் தானே அரசியலின் பெயரால், மக்களை சுரண்டிப் பிழைக்கும் அரசியல் தரகர்கள் தோன்றுகிறார்கள். எனவே அரசியலே வேண்டாம் என்று சொல்வதுப் போல் இருக்கிறது. மக்களின் உணவாக அரிசி இருக்கப் போய்த் தானே மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அரசியில் கல்லைக் கலக்கிறார்கள்; எனவே மக்கள் அரிசியை உணவாகக் கொள்ளக் கூடாது என்று சொல்வதுப் போல் இருக்கிறது.

அரசியலில் அயோக்கியர்கள் நுழைவதைத் தடுப்பதற்கு திறமையில்லாதவர்கள், அரசியலில் கல்லைக் கலக்கும் அயோக்கியர்களை ஒழித்துக் கட்ட வகைத் தெரியாதவர்கள் அரசியலே வேண்டாம்; அரிசியே வேண்டாம் என்று பிதற்றுவதுப் போன்ற ஒரு பிதற்றலைத் தான் ஒரேக் கடவுளைப் பற்றி நாத்திகர்கள் பிதற்றுகிறார்கள். கடவுளின் பெயரால் புரோகித அயோக்கியர்கள் புரிந்து வரும் அயோக்கியத்தனங்களை ஒழித்துக்கட்ட வழித்தெரியாத நாத்திகர்கள், படைத்த அந்த இணை, துணை இல்லாத ஒரே இறைவனை ஒழித்துக் கட்ட முற்படுகிறார்கள்.

அரிசியை உணவாகக் கொள்வதைத் தடுப்பது எப்படி சாத்தியமில்லையோ அதேப் போல் அகில உலகங்களையும் படைத்து, அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து, உணவளித்து நிர்வகித்து வரும் இணை துணை இல்லாத அந்த ஏகன்-ஒரே இறைவனையும் இல்லை என்று ஒரு போதும் நிலைநாட்ட முடியாது; அதுமட்டுமல்ல நாத்திகர்களின் இந்தத் தவறான எண்ணத்தால், முயற்சியால் மனிதக் கற்பனையில் உருவான எண்ணற்றப் பொய் கடவுள்களையும், அந்தக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் புரோகிதர்களையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. காரணம் சத்தியத்தால் அசத்தியத்தை ஒழித்துக் கட்ட வாய்ப்பு உண்டு. ஆனால் அசத்தியத்தால் சத்தியத்தை ஒழித்துக் கட்ட முடியாது. பெரியாரின் கொள்கைகளையேப் பின்பற்றுகிறோம் என்று மேடையில் முழக்கமிடுவோரின் செயல்பாடுகளே இதற்கு போதிய ஆதாரமாகும்.

ஆரம்பத்தில் ஒரே இறைவன் தான்-ஒரேக் கடவுள் தான். அவன் படைத்து ஒரே மனித சமுதாயம் தான். இதை தான் தமிழக அறிவுசால் முன்னோர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மக்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால் மனிதவர்க்கத்தினருக்குப் போட்டியான படைப்பி(ஜின்)லுள்ள ஷைத்தான்-ஷாத்தான் மனித இனத்தை வழிக்கெடுத்து அழிவுப் பாதையில் இட்டுச் சென்று நரகில் தள்ளுவேன் என்று சபதம் ஏற்றிருக்கிறான். அவனது வலையில் சிக்குபவர்களை நரகில் தள்ளுவேன். என்று இறைவனும் வாக்களித்திருக்கிறான்.

நாத்திகர்கள் இந்த இடத்தில் ஆழ்ந்து சிந்தித்து விளங்க வேண்டும். அவர்கள் மேடைகளில் மக்கள் மன்றத்தில் நீதி, நேர்மை, சத்தியம், உண்மை என்று முழங்கும் பல காரியங்களில் அவர்கள் பகுத்தறிவு ஏற்று ஒப்புக் கொண்டு சரிகண்டு மேடைகளில் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தப்படி அந்த நீதியை நேர்மையை சத்தியத்தை-உண்மையை தங்களின் அந்தரங்க தனிமனித வாழ்க்கையில் கடைப்பிடிக்கீறீர்களா? கடைப்பிடிக்க முடிகிறதா? என்று அவர்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எத்தனைக் காரியங்களில் அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்கள் என்பதை அவர்களே உணர்ந்துக் கொள்ள முடியும். அப்படியானால் அவர்கள் சரி கண்டுள்ள விஷயங்களில், அவர்களின் மனசாட்சிக்கே மாறாக அவர்களைச் செயல்பட வைக்கும் சக்தி எது? அந்தச் சக்தியைத் தான் ஷைத்தான்-சாத்தான் என்கிறோம்.

மதங்கள் அனைத்தும் மனிதர்களால், குறிப்பாக மதப்புரோகிதர்களால், அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்யப்பட்டவையே அல்லாமல் அந்த ஒரே இறைவன் கொடுத்தவை அல்ல. இறைவனால் மனிதனுக்கென்றுக் கொடுக்கப்பட்டது. தூய வாழ்க்கை நெறி-நேர்வழி-ஒரே வழி. கோணல் வழிகள்- மதங்கள் இறைவன் கொடுத்தவை அல்ல. ஆக உலகிலுள்ள இன்றைய மனித சமுதாயத்தின் 99 விழுக்காட்டினர் இந்தப் புரோகிதர்கள் பின்னால் பல கோணல் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பரிதாப நிலையை ஓரளவு சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் பார்த்து மனம் கலங்குகிறார்கள். மனித சமுதாயத்தின் பரிதாபகரமான ஏற்றத்தாழ்வு நிறைந்த சுரண்டல்கள் நிறைந்த-ஜாதிக் கொடுமைகள் நிறைந்த -மனிதனே சக மனிதனை அடிமைப்படுத்தும் நிலை மனிதனே இன்னொரு மனிதனை மனித மலத்தைத் தின்ன வைக்கும் கொடுமை இவற்றை எல்லாம் பார்த்து பதைபதைக்கிறார்கள்.

ஜோதிடம், நல்ல நேரம்-கெட்ட நேரம், எண் ஜோதிடம், வாஸ்து சாத்திரம், கிரகபலன், பெயர் மாற்றம், ரெகை சாத்திரம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் இன்னும் பலவகை ஜோசியங்கள், ராசி பலன்கள், கற்கள் ராசி, சகுனம் பார்த்தல் இத்தியாதி இத்தியாதி-மூட நம்பிக்கைகளில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் கொடூர நிலைகளைக் கண்டும் மதங்களின் பெயரால் கர்மாதி, ததி, 3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா தேர், சப்ரம், கூடு, என இறந்தவர்களின் பெயரால் பொய்க் கடவுளர்களின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள், சிலை வழிபாடு, சமாதி வழிபாடு யானை, எலி, பாம்பு என பல பிராணிகளின் வழிபாடு, அறிவுக்கே பொருந்தாத கற்பனை கட்டுக் கதைகள், இன்னும் இவைப் போல் ஏட்டில் அடங்கா, எழுதி மாளாத மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் மக்கள் ஏமாற்றப்படுவதை, அவர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதை கண்டு சகிக்காத பகுத்தறிவாளர்கள், கடவுள்களின் பெயரால் தானே அறிவுக்கே பொருந்தாத இப்படிப்பட்ட அட்டூழிங்கள் அரங்கேறுகின்றன. கடவுளே இல்லை என்று சாதித்து விட்டால் இவை அனைத்தும் ஒழிந்துவிடும் என்று இவர்களாக கற்பனை செய்துக் கொண்டு ஒரெயொரு உண்மையான கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆக உண்மையான ஒரேக் கடவுளின் பெயரால் இந்தப் புரோகித வர்க்கத்தினர் எண்ணற்ற கடவுள்களை கற்பனை செய்துவிட்டதால், அந்த எண்ணற்ற பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரே கடவுள்களையும், ஒழித்துக் கட்டலாம் எனப் பகல்கனவுக் காண்கிறார்கள். பகுத்தறிவு பேசும் நுண்ணறிவு இல்லாதவர்கள். உண்மையில் இன்று உலகில் என்ன நடைபெறுகிறது என்றால், பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்கள் மக்களை ஒரு பக்கம் வழிக்கெடுக்கிறார்கள்; உண்மைக் கடவுளையும் மறுக்கும் நாத்திகர்கள் மக்களை மறுபக்கம் வழிக் கெடுக்கிறார்கள். ஆக பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்களாலும் உலகிற்கு ஆபத்து; ஒரே கடவுளை மறுக்கும் நாத்திகர்களாலும் உலகிற்கு ஆபத்து. உலகம் முழுவதும் இன்று அழிவில் மிதக்கிறது. ஆக இரு சாரரும் மனித விரோதிகளேயாவர்.

உண்மைக் கடவுளை மறுப்பதற்கு இன்னொரு நியாயமான காரணத்தையும் இந்த மதப் புரோகிதர்கள் உருவாக்கி விட்டார்கள். பெரும்பாலான மக்கள் இந்தப் புரோகிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் விஞ்ஞான வளர்ச்சி, மனித அறிவு முதிர்ச்சி காரணமாக பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. இவை இதுக் காலம் வரை இந்தப் புரோகிதர்களால் கற்பனையாக சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து எறிவனவாக இருக்கின்றன. இதை இந்தப் புரோகிதர்களால், அவர்களின் தலைமைப் பீடங்களால் சகிக்க முடியவில்லை.

எனவே அந்த உண்மைகளை வெளிப்படுத்தும் அறிஞர்களை-விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்திக் கொல்லவும் செய்தார்கள். அறிஞர் சாக்ரட்டீஸ், கலிலியோ, இன்னும் இவர்கள் போல் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் உண்மைகளைச் சொன்னக் காரணத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள். விஞ்ஞான ஆய்வில் கோளாறு இருந்தால் அது தவறாக இருக்கலாம். ஆனால் சரியான ஆய்வில் முறையாக கண்டுப்பிடிக்கப்படும் உண்மைகள் இறைவனுடைய கூற்றுக்கு முரணாக ஒருபோதும் இருக்காது. காரணம் இறை அறிவிப்புகள் இறைவனது சொல்; நிருபிக்கப்பட்ட விஞ்ஞானம் இறைவனது செயல்; எனவே இறைவனது சொல்லும் செயலும் ஒருபோதும் முரண்பட முடியாது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான். என்ற டார்வின் தத்துவம் ஒரு தவறான ஆய்வு-தத்துவம் என இன்று நிரூபிக்கப்பட்டது. மரபணு (TNA) ஆய்வு முலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மூலம் வந்தவர்களே என்ற குர்ஆன் கூறும் உண்மை இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இறைத்தூதர் மூஸாவுக்கு, இறைத்தூதர் ஈஸாவுக்கு அருளப்பட்ட தவ்றாத்தும், இன்ஜீரும் னிதக் கரம் பட்டு கலப்படமாகி பல மூடநம்பிக்கைகள் அவற்றுள் நுழைந்து விட்டன. அவற்றிலுள்ள உண்மையான இறை அறிவிப்புகள் ஒருபோதும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு முரண்படாது. இடையில் இந்த யூத கிறித்துவ புரோகிதர்களால் நுழைக்கப்பட்ட மனிதக் கருத்துக்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த மதப்புரோகிதர்கள் இறை அறிவிப்புகளை விட மனிதக் கற்பனைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் அவையே அவர்களின் பிழைப்புக்குரிய வாழ்வு ஆதாரங்களாகும்.

இறைவனால் இறுதியாக அருளப்பட்ட அல்குர்ஆன் இன்று சுமார் 1425 ஆண்டுகளாகியும் அதன் அசல் நிலை மாறாமல் இருக்கிறது. முஸ்லிம் அல்லாத பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக ஒரேயொரு ஆதாரமாவாது அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ஆராய்ந்தும், இறுதியில் தோல்வியையே தழுவினர். அவர்களில் சிலர் இஸ்லாத்தை நேர்வழி எனக் கண்டு அதில் இணைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவர் மாரிஸ் புகைல் என்ற பிரெஞ்சு டாக்டர். அவர் “விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும் என்று ஒரு நூலே எழுதியுள்ளார். அதில் 19, 20ம் நூற்றாண்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட உண்மைகளை 6-ம் நூற்றாண்டிலேயே அல்குர்ஆன் எடுத்துரைக்கும் அர்ப்புதத்தை விளக்கியுள்ளார். அதே சமயம் பைபிளில் எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதையும் கண்டறிந்தார். முறையாக பகுத்தறிபவர்களுக்கு இந்த நூல் ஒரு அறிய வழிகாட்டியாகும்.

மருத்துவர் மாரிஸ் புகைஸ் போல் பல அறிஞர்களும் மனிதகுலம் அனைத்திற்கும் நேர்வழிக்காட்டி நூல்-நெறி நூல் அல்குர்ஆனை ஆய்வு செய்து அசந்து போயிருக்கிறார்கள். ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அல்குர்ஆனில் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்து இருக்கிறது என்று நிலைநாட்டிவிட வேண்டும் என்ற வெறியோடு அல்குர்ஆனை வரிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தவர்கள். ஆனால் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். அவர்களில் சிலர் இஸ்லாத்தையும் அல்குர்ஆனையும் இழிவுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆய்வில் ஈடுபட்டவர்கள். அல்குர்ஆன் வெளிப்படுத்தும் விஞ்ஞான உண்மைகளைக் கண்டு, இது உண்மையில் 6-ம் நூற்றாண்டில் தனி ஒரு மனிதரோ, அல்லது ஒரு குழுவினரோ முயற்சிகள் செய்து எழுதிய நூல் அல்லவே அல்ல; இது மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியால் மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

“அல்குர்ஆன் தனி ஒரு மனிதனாலோ, ஒரு குழுவினராலோ எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், இறைவனைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு முழுக் குர்ஆன் அல்ல அதிலுள்ள ஒரு அத்தியாயம் போல் பிரிதொரு அத்தியாயத்தை எழுதிக் காட்டட்டுமே பார்க்கலாம்” என்று அல்குர்ஆன் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1429 ஆண்டுகளாக அந்த சவாலை மனிதர்களால் முறியடிக்க முடியவில்லை. அல்குர்ஆன் அன்று மனிதனால் எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன என்று கூறுகிறவர்கள், ஒன்றில் ஆத்திரத்தோடு, வெறுப்போடு காழ்ப்புணர்வுடன் அல்குர்ஆனை ஆய்வு செய்தவர்களாக இருக்க வேண்டும்; அல்லது அவசரஅவசரமாக நுனிப்புல் மேய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே நடுநிலையோடு, ஆழ்ந்து அல்குர்ஆனை ஆராய்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.

எனவே நாத்திக பகுத்தறிவுச் சகோதரர்கள், இருக்கும் ஒரேக் கடவுளே சுயநலப் புரோகிதர்களின் கற்பனையில் பல பொய்க் கடவுளர்களாகி அதிலிருந்து பிறந்ததுத்தான் நாத்திகவாதம் என்பதை அறிந்துக் கொள்வார்களாக. நடுநிலையோடு தங்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருத்துக்களை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல், விருப்போ வெறுப்போ இல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலினை ஆழ்ந்து ஆய்வு செய்தால் அற்புதமான விளக்கங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.

அந்நஜாத்

நன்றி : http://www.readislam.net/portal/archives/2674


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

தஞ்சை வடக்கு மாவட்டத் தலைமையில் இஸ்லாத்தை ஏற்ற பெண்!




அல்லாஹ்வின் கிருபையால் சமுதாயம் நலன் பெறும் பற்பல பணிகளை செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் தலைமையத்தில் கடந்த 11.02.11 அன்று திருபுவனத்தை சேர்ந்த சகோதரி K.உமா மகேஸ்வரி அவர்கள் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (அல்ஹம்துலில்லாஹ்)

...



அவருக்கு ஆயிஷா என்று பெயர் சூட்டப்பட்டது. அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களையும் மண்டல தலைவர் A.ஜாபர் அலி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

சனி, 12 பிப்ரவரி, 2011

கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி

இறைவன் மனிதனை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்துள்ளான். அவனை அறிந்து, நேசித்து, அவனை அடைவது தான் அவனது விருப்பம். பிறப்பின் மூலம் மனிதன் பல சமுதாயத்தில் சிதறி தோன்றியிந்தாலும் அவன் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டாமல் இல்லை...

அந்த அடிப்படையில் என்னையும் அவன் தேர்ந்தெடுத்து தான் விரும்பிய, அங்கீகரிகப்பட்ட மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைத்துள்ளான். நான் மட்டுமல்ல ஏராளமானோர் பல சமயங்களிலிருந்து இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமாகவே உள்ளனர். ஆனால் நான் வந்தது உலகத்தில் இன்று அதிகமானோர் இடம் பெற்றிருக்கும் கிறிஸ்தவத்திலிருந்து என்றால் அது இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இல்லையா என்ற கேள்வி தோன்றும். இதற்கு விடையாகத் தான் இந்த கட்டுரை இங்கே இடம் பெறுகிறது.

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் வாழும் இந்த மனித இனம் ஒரு சிலரால் கவரப்பட்டு, தங்களின் வாழ்நாட்கள் மதத் தலைவர்களின் போதனையால் அடிமைப்படுத்தப்பட்டு, மன எழுச்சி குன்றிப்போய் வாழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஏன் என்ற கேள்வியில்லாமல், தொலைந்து போன வாழ்வு வாடிய பயிராய் காய்ந்து போவதைவிட எதையும் ஏன், எதனால், எதற்காக என்ற பொதுவான கேள்வி கேட்டு அவரவர் தம் அறிவை கூர்மையாக்குவதே சிறந்தது. அப்போது அடிமைத்தளையில் ஒடுங்கிப்போன வாழ்வு புத்துயிர் பெற்று சீராக அமையும்.

யேசுநாதர் இந்த உலகில் ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை, மாறாக படைத்த இறைவனை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அவனை மட்டும் வணங்கவும் கூறிச்சென்றார். பின்னால் வந்தவர்கள் கிரேக்க, ரோமானிய வழிபாடுகளை கிறிஸ்தவத்ததின் பெயரால் அரங்கேற்றினார்கள். அதற்கு உதாரணமாக யேசுநாதர் பேதுருவிடம் சொன்ன இறுதி பேரூரைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமானது. பேதுரு என்ற ராயப்பர் இறை தூதர் அல்ல, யேசுநாதரின் முதன்மை சீடர், அவருக்கு திருச்சபை உருவாக்க அதிகாரம் கொடுத்ததாக யோவான் தமது நூலில் யோவான் 21:15-17 வரை குறிப்பிடுகிறார். இந்த செய்தி வேறு எந்த எழுத்தாளரும் எழுதவில்லை!

இயேசுநாதர் உலகத்தை விட்டு செல்லுமுன் சீமான் பேதுருவைப் பார்த்து ”நீ என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்ற மும்முறை மொழிந்ததை வைத்தே சிலர் இத்தாலியில் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரில் தொடங்கினார்கள். இது நீகியா கருத்தரங்கு அரங்கேறிய கி.பி 325-க்குபின் என்பது குறிப்படத்தக்கது. அதுவரை போப் வகையறாக்கள் இருந்ததாக முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திரித்துவம்—- அதாவது முக்கடவுள் கொள்கை என்ற போலிசித்தாந்தம் அதாவது ஏக இறைவனை மூன்றாகப்பிரித்து ஒன்றாக கருத வேண்டும் என்பதே நோக்கம். இதில் தான் மூச்சு முட்டுமளவு முடங்கி போய் மொத்த கிறித்தவரும் உள்ளனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒருவர் தான் என்பது இவர்களின் வாதம். இதை எதிர்த்த பிஷப்புக்கள் அன்று கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அர்யுஸ் என்ற பிஷப்பு கான்ஸ்டான்டி அரசனால் நாடு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதனை நமது நாட்டு வரலாற்றுப் புத்தகத்தில் கூட காணலாம்.

”நீ பூமியில் எதை கட்டுவாயோ அது பரலோகத்தில் கட்டப்படும். நீ பூமியில் எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும்” என்று பேதுருவைப் பார்த்து இயேசுநாதர் கூறியதை இதற்கு ஆதாரமாக வைத்து (மத்தேயு 16:15-19) புதிய ஒரு சபையை இயேசுநாதர் பெயரால் அரங்கேற்றம் செய்தார்கள்

ஆனால் இயேசுநாதர் முஸ்லிமாக இருந்தார், விருத்தசேதனம் செய்யப்பட்டார். அவருடைய மார்க்கம் இஸ்லாமாக இருந்தது. அவர் தமக்கு முன் உள்ள வேதங்களை உண்மைப்படுத்தவே வந்தார் என்பது தான் உண்மை (மத்தேயு 5:17)

திருச்சபையின் நூதன உபதேசங்கள்:

ஞானஸ்நானம் : சிப்கத்
உறுதி பூசுதல் : பையத் (ஸ்திரப்படுத்தல்)
பச்சாத்தாபம் : தவ்பா (மனஸ்தாபப்படுதல்)
நற்கருணை : அப்பம், ரசம் (சிலுவை மரணம் நினைவு கூர்தல்)
அவஸ்தை பூசுதல் : சக்கராத் ஓதல்
குருத்துவம் : அஹ்பாரிஸம் (துறவறம்)
திருமணம் : நிக்காஹ்

இவையெல்லாம் கடைபிடித்து நடந்தால் சுவர்க்கம் போக டிக்கட் கிடைக்கும். மத குருமார்கள் இறைவனின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றார்கள்! துறவறத்துக்கு வித்திட்டதும், கிறிஸ்துவ சபை உருவாக வழி வகுத்ததும் பவுல் என்ற யூதன் ஆவார். இவர் இயேசுநாதரின் சீடரோ அல்லது தீர்க்கதரிசியோ இல்லை. இயேசுநாதரின் காலத்தில் கிறித்துவ எதிரியாக வாழ்ந்தவர் கிறிஸ்துவின் கொள்கைக்கு சுய விளக்கம் கொடுத்தும், சிலுவை மரணத்தை நியாயப்படுத்தியும், ஆப்ராஹாமின் கொள்கையையும், மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்காமலும் இவராகவே பல கடிதங்கள் பல நாட்டவருக்கு எழுதி வேதவாக்கு என நம்பிடச் செய்தார்.

இவருடைய சித்தாந்தம் அன்றைய மத குருமார்களை பெரிதும் கவர்ந்ததால் பூசைப்பலி, திரித்துவக் கொள்கை, சிலுவை மரண வழிபாடு, பாவமன்னிப்பு ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.

கி.பி 1550 ஆண்டிற்கு பின்பு தான் திருச்சபை பல சபைகளாக பிரிந்தும் எதிர்த்தவர்கள் புரொட்டஸ்டன்டுகளாக மாறியும் கட்டுக் கோப்புகள் சீர்குலைந்தது இந்தியாவில் கிபி 1600-க்குப் பின்புதான் வெள்ளையர்கள் மூலமாக பல சபைகள் ஊடுருவின. பாமர மக்கள் பாவிகளாக இருந்தபடியால் இரட்சிப்பு இரத்தம் சிந்துதல் மூலம் தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இயேசு நாதரை அதற்கு பலிகடாவாக்கி நம்பினார்கள்.

எனது மூதாதயரும் இந்த போலி சித்தாந்தத்துக்கு கட்டுப்பட்டு கிறிஸ்தவரானார்கள். நானும் நீண்ட காலமாய் இதை புரியாமல் தடுமாறி பல சபைகளின் உபதேசத்தை நாடி தேடி அலைந்து முடிவில் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என குருட்டு நம்பிக்கையில் இருந்தேன்.

1995-ம் ஆண்டில் தான் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இயேசு நாதர் கூறிய அநேக உண்மைகள் இறைவன் மூலமாக அறிய முடிந்தது. போலியான உபதேசத்தால் வாழ்நாட்களின் பெரும் பகுதியை இழந்த நான் திருக்குர்ஆனை பல கோணங்களில் ஆய்வு செய்தேன். குர்ஆன் இறை தூதர் முஹம்மத்-வின் வார்த்தையாகவோ அல்லது தனி மனித கருத்தாகவோ அல்லாமல் அதன் பெரும்பாலான வசனங்கள் நபியே கூறுவீராக என்ற ஏவலின் அடிப்படையில் அமைந்த காரணத்தால் திருக்குர்ஆன் இறைவேதமே என புரிந்து கொண்டேன்.

இத்திருமறை தனி மனித வழிபாட்டை தரைமட்டமாக்கி சிந்திக்க தடையாக இருந்த புரோகித ஏஜென்டுகளையும், மத சித்தாந்தங்களையும், புறம் தள்ளி உண்மையை நன்கு உணர வைத்து விட்டது. அதாவது இயேசு நாதர் எப்படி பிறந்தார், இறைவன் மூலம் அவர் செய்த அற்புதங்கள், சிலுவையில் அறையவிடாமல் பாதுகாத்ததும் இதில் வருவதை காணலாம்.

இறைவனை எப்படி அறிவது, வணங்குவது என்பதையும் அவனை அடையவுள்ள எல்லா வழிமுறைகளையும் இறைதூதர் முஹம்மத் அவர்களுக்கு இறைவன் வழங்கியதை பார்க்கும் போது இயேசு நாதர் தமக்குப் பின்னால் வரவிருக்கும் ஒருவரை அறிமுகம் செய்தது இந்த முஹம்மத் நபியைத்தான் என பூரணமாக அறிந்து கொண்டேன். இதை மத்தேயு 21:33-44, யோவான் 16:7ல் காணலாம். திருமறை குர்ஆனில் 61:6ல் கூட இயேசுநாதரின் முன்னறிவிப்பைக் காணலாம்.

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சாத்தியங்களுக்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாக பேசாமல் நாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களைக் குறித்து உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13-ல் இதைப் பார்க்கிறோம். இதை சற்று விரிவுபடுத்தி படித்தால் திருமறை குர்ஆனில் 53:6-லி வரும் வசனங்கள் இதற்கு சான்றாய் அமைவதைக் காணலாம். சத்திய ஆவியானவர் கபிரியேல் என்ற வானவர் மூலம் இறை வசனங்கள் நபிக்கு வழங்கப்படுவதும், நபிநாதர் மன இச்சைப்படி பேசாமல், கேள்விப்பட்டதை பேசுவதையும் இறைவன் வெளிப்படுத்திய திருமறை குர்ஆனில் காணலாம்.

எனவே இறைவன் கூற்றுப்படி (2:79) தங்களின் கரங்களால் ஒரு நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது இறைவனிடமிருந்து வந்தது என்று சொல்லுகிறவர்களுக்கு கேடு என்பதை குர்ஆன் மூலம் புரிந்து கொண்டேன். சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே இருக்கிறது (17:81) எனவே கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாம் நோக்கி வந்தது பெரிய வியப்பொன்றுமில்லை. தங்கள் சொந்த மக்களை சந்தேகமில்லாமல் அறிவதைப்போன்று

போன்று வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இந்த வேதத்தையம், இந்த நபியையும் அறிந்து கொள்வார்கள் (திருக்குர்ஆன்: 6:20)

மேலும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒரு போதும் இறைவனால் அங்கீகரிக்கப்படமாட்டாது. மறுமைநாளில் அவர் நஷ்டவாளிகளில் ஒருவராய் இருப்பார் (அல்குர்ஆன் 3:85)

இப்படி அனேக வசனங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதினால் இயேசுநாதரைக் குறித்தும், அவருடைய தாயாரைக் குறித்தும் வரம்பு மீறாமல் இறைவனின் செய்திகளை நம்புவதே ஒரு உண்மை விசுவாசியின் நிலையாகும். இயேசு நாதர் இறைவனுமில்லை, இறைவனுடைய மகனுமில்லை, மாறாக மரியாளின் மைந்தனும், இறைவனுடைய வார்த்தையுமாவார். இதை அறிந்தவர் இயேசு நாதரின் மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைவது உறுதி. அந்த அடிப்படையில் நான் இஸ்லாத்தில் இணைத்தது மிகப்பெரிய வியப்பொன்றுமில்லை.

சனி, 5 பிப்ரவரி, 2011

மறுமணத்தை ஊக்குவிப்போம்!

நன்றி : A.H. ஃபாத்திமா ஜனூபா

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]

உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.

இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திNலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.

கணவனை இழந்து மறுமணம் செய்ய முடியாமல் இல்லறத்திற்காக ஏங்கி நிற்கும் மனவேதனை ஒருபுறம், சமூகத்தவர்களால் தனக்கு ஏற்படும் அவமானம் மற்றொரு புறம். இதனால் சிலர் வாழ்நாள் முழுவதும் தான் வாழத்தான் வேண்டுமா? என தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலை. இன்னும் சிலரோ ‘இருப்பதைவிட இறப்பதே மேல்’ என தானாகவே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். மற்றும் சிலரோ மறுமணம் செய்ய முடியாததால் இல்லறத்தை நோக்கி அலைபாயும் எண்ணங்களைத் தணித்துக்கொள்ள தவறான வழியில் வாழ்வைத்தேடி புதைகுழியில் விழுகின்றனர்.

இத்தனை இழிநிலைகளும் கணவன் இறந்தபின் வாழாவெட்டியாக உயிர் வாழ்வதால்தானே ஏற்படுகிறது! எனவே இதற்கெல்லாம் வழிகொடுக்காமல் கணவனுடன் சேர்ந்;;து உடன்கட்டை என்ற பெயரால், அவளையும் சாகடிக்கும் கொடுமையை இன்றும் அவ்வப்போது வடநாட்டின் சில இடங்களில் காணத்தானே செய்கிறோம். பெண்களின் வாழ்வுரிமையை திட்டமிட்டல்லவா பறிக்கிறது இக்கொடிய பழக்க வழக்கங்கள்!

ஆணும் பெண்ணும் ஒருமனதாக திருமணம் செய்து இல்லறத்தின் இன்ப துன்பங்களில் சமமாக பங்கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது கணவன் இறந்தால் மட்டும் பெண்ணாகிறவள் உடன்கட்டை ஏறவேண்டும். இதே மரணம் மனைவிக்கு முன்னதாக ஏற்பட்டால் எந்த கணவனாவது உடன்கட்டை ஏறியதாக எங்காவது கேள்வி பட்டிருக்கோமா? அவன் ஏன் மனைவியுடன் உடன்கட்டை ஏறப்போகிறான். மனைவி இறந்தவுடன் புதுமாப்பிள்ளை எனும் அங்கீகாரம்தான் அவனுக்குக் கொடுக்கப்படுகிறதே! பெண்ணினம் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறென்ன வேண்டும்?

கணவனை இழந்ததை தன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய இழப்பாகக் கருதி மற்றொரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு பெண்ணுக்கு கவுரவமா? அல்லது கொடுமைக்கார மனிதர்களுக்கு அஞ்சி கேழைத்தனமாக உயிரைக் கொடுப்பது கவுரவமா? இவை அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டும்.

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கொடுமைகளுக்குச் சாவுமணி அடித்தது. ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.

இதுபற்றி அல்லாஹ் திருமறையில், ‘இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணையில்லா (ஆடவர் பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்ஸ’ (அல்குர்ஆன் 24:32)

மேலும் திருமறையின் 2 ஆவது அத்தியாயத்தின் 234 ஆவது வசனத்தில், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும். இந்த தவணை பூர்த்தியானதும் (தங்கள் நாட்டத்திற்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் முறைப்படி எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவனாக இருக்கின்றான்.’ என்று அல்லாஹ் அனுமதியளிக்கின்றான்.

இதுபோன்று விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையும் (கர்ப்பத்தை அறியும் மூன்று மாத) தவணைக்காலம் முடிந்ததும் மறுமணம் செய்துக் கொள்வதை தடுக்கக்கூடாது என்று அல்லாஹ் திருமறையின் 2:23 ஆவது வசனத்தில் எச்சரிக்கையும் செய்கின்றான். இத்திருமறையின் வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் வாழ்வுரிமையை நிலைபெறச்செய்ய மறுமணத்தை செய்து கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். இதனை வழிகாட்டியாக ஏற்ற உத்தம நபித்தோழர்களும் இப்புரட்சியைச் செய்துள்ளார்கள்.

இனிமேலும் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்தும் ஆணினத்தைப் போன்று பெண்ணும் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவள்தான். ஆண்களைப் போன்ற உணர்வகளும், வாழும் ஆசைகளும் அவளுக்கும் உண்டு என உணர்த்த வேண்டும்.

விதவைப் பெண்களை இழிவுபடுத்துபவர்களைச் சட்டம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அவர்கள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்திட உரிமை கொடுக்க வேண்டும். மேலும் உலகிலுள்ள அனைவரும் பெண்களின் உரிமைகளைப் பேணும் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வெண்டும்