வெள்ளி, 24 டிசம்பர், 2010

TNTJ தலைவர் அல்தாஃபியும் 40 பாதிரியார்களும்

கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்.

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர், 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட்டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:



மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:

அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.



உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.

1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.

உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.



இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதாவது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.
தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.



மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.

ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.

அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:

கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.



அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------
Thanks :- tntj.net & tvtntj.net (as copied and pasted with pictures)
--------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
1 - எனது ஊருக்கு அடுத்த குடந்தையின் பாதிரியார் பெருமக்கள், தங்கள் பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தது என்னை கவர்ந்தது. நிச்சயமாக இது சமூக ஒற்றுமைக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.

2 - அதற்கு உடனே இசைவு தந்ததோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு தமிழக அளவில் பிரபலமான ஓர் இஸ்லாமிய அமைப்பின் மாநிலத்தலைவரே உடனடியாக-நேரடியாக சென்று அங்கே உரை நிகழ்த்தியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

3 - அதுமட்டுமின்றி, அவர் நிகழ்த்திய உரை எனக்கு மிக மிக பிடித்திருந்ததால், அது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என நான் கருதியதால்தான் இந்த காபி/பேஸ்ட் பதிவு. (வண்ணம் தீட்டி படம் காட்டியது மட்டும் நம் வேலை..!).

நன்றி :

திங்கள், 20 டிசம்பர், 2010

கிறிஸ்துமசும் இஸ்லாமும்!

நன்றி : அபூ அப்திர்ரஹ்மான்

ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!

இஸ்லாம் படைத்த இறைவனின் இயற்கை மார்க்கமாகும். அதனை ஏற்றுக்கொண்டவனே முஸ்லிம். ஒரு முஸ்லிமின் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இஸ்லாம் முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பிற மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. மேன்மை மிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

"மார்க்க விஷயத்தில் உங்களுடன் எவர் போரிடவில்லையோ, இன்னும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை விட்டும், அவர்களின் பால் நீங்கள் நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்" (அல்குர்ஆன் 60 அல் மும்தஹினா:8)

இஸ்லாமல்லாத பிற மதத்தவர்கள் பகிரங்கமாக இஸ்லாமுடன் போர் தொடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லையென்றும் அவர்களுடன் நீதியுடன் நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் நீதிமான்களுக்கெல்லாம் நீதிபதியாகிய அல்லாஹ் அறிவிக்கின்றான்.

தெளிவான நீதி மிக்க ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் பிற மதத்தவர் வணங்கும் கடவுளர்களை ஏசுவதையும் தடை செய்துள்ளது.

அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போர நீங்கள் திட்டாதீர்கள், அப்போது அவர்கள் அறிவின்றி, வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் (6 அல்அன்ஆம் 108)

ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இஸ்லாம் எந்நிலையிலும் அதன் கொள்கைக் கோட்பாடுகளில் சிஞ்சிற்றும் விட்டுக்கொடுத்தல்களை ஏற்பதில்லை. அக்காரணத்தால் தான் இஸ்லாம் அதன் கொள்கையில் தனித்து விளங்குகிறது. தெளிந்த நீரோடை போன்ற குழப்பமற்ற இறைகொள்கையில் அது என்றும் நிலைத்து நிற்கிறது. காரணம் அது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனிடமிருந்துள்ள வழிகாட்டுதல் ஆகும்.

இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உண்மையானவன், அவனையன்றி நிச்சயமாக எதை அவர்கள் அழைக்கின்றார்களோ அது பொய்யானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உயர்வானவன், மிகப்பெரியவன் என்ற காரணத்தினாலாகும் (22 அல்ஹஜ் 62 மேலும் பார்க்க 31:30)

இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம். அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன் இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.

"நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 17, 72)

"நிச்சயமாக அல்லாஹ் - மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் திட்டமாக (அவனை) நிராகரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 73)

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்! அவன் (எவரையும்) பெறவுமில்லை, அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை! இன்னும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை! (அல்குர்ஆன் 112: 1-4)

இஸ்லாமின் உறுதியான இறைக் கோட்பாட்டையும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்த இஸ்லாமிய நிலைபாட்டையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன!

அடுத்ததாக, கிறிஸ்துமஸ் என்பது என்ன? இயேசுவின் பிறந்த தினம்! இதனை அவர்கள் கொண்டாடுகின்றனர்! இதற்காக வாழ்த்துக்கள் பரிமாறப்படுகின்றன! ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே யாருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது? எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அது கொண்டாடப்படுகிறது? என்பதுதான் முக்கியம்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்னும் அவரையே கர்த்தர் என்றும் நம்புகின்றனர். அப்படியானால் டிஸம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர்களின் நம்பிக்கைப் படி அல்லாஹ்வுடைய மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். அவர்களின் இந்த நம்பிக்கையை வல்லமை மிக்க அல்லாஹ் இவ்வாறு மறுத்துக் கூறுகின்றான்.

உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர், (அவ்வாறே ஈஸா) மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர், இது அவர்களுடைய வாய்களால் கூறும் (ஆதாரமில்லா வெற்றுக்) கூற்றாகும். (இவ்விஷயத்தில் அவர்களுக்கு) முன்பிருந்த நிராகரிப்பாளர்களின் சொல்லுக்கு அவர்கள் ஒப்பாகின்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்? (9 அத்தவ்பா 30)

அல்லாஹ்வுடைய தூதரான ஈஸா மஸீஹ் (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்ற அவர்களின் கூற்று ஆதாரமற்ற இட்டுக் கட்டுதல் என்பது மட்டுமல்ல, இது அல்லாஹ்வின் உயர்ந்த தன்மைகளில் அவர்கள் ஏற்படுத்திய களங்கமாகும்! இப்பேரணடத்தையே அதிர வைக்கும் மிகப்பெரிய அபாண்டமாகும்! வல்லமையும் மேன்மையும் மிக்க அல்லாஹ் பறைசாற்றுகிறான்:

இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்!. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று அவர்கள் அழைப்பதனால்-(இவை நிகழ்ந்து விடக்கூடும்) ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். (19 மர்யம் 88-95)

அது மட்டுமல்ல, அவர்களுடைய இந்த இட்டுக்கட்டுதலைக் கூறும் இடங்களில் அதைவிட்டும் அல்லாஹ் மிகத்தூயவன் என்று அவனது பரிசுத்தத் தன்மையைப் பறைசாற்றுகிறான்.

மேலும், அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர், (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மகாத் தூய்மையானவன் - அன்றியும் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவை, அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (2 அல்பகரா: 116) மேலும் (10:68, 21:26)

இன்னும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் அவனது வல்லமைகளையும் திருநாமங்களையும் பற்றி எடுத்துக் கூறும் இடங்களிலும் அவன் தனக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு நாடியிருந்தால் அவன் அதை செய்திருப்பான், ஆனால் அதை விட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கிறான் என்றும் பறைசாற்றுகிறான்.

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக! (17 அல்-இஸ்ரா 111)

அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்! (25:2)

"இன்னும் நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது, அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, புதல்வனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (72 அல்ஜின்னு 3)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6 அல்அன்ஆம்: 101)

இன்னும் பின் வரும் வசனம் மிகவும் சிந்தனைக்குரியதாகும்!

நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!" (43:81)

முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். இந்த சமுதாயத்துக்கு எல்லா வகையிலும் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். அல்லாஹ்வுக்கு ஒரு பிள்ளை என்று இருந்திருந்தால் அதை நானே முதலில் வணங்கி உங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு வல்லமை மிக்க அல்லாஹ் அவர்களிடம் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவன் எடுத்துக் கொண்டான் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு இவ்வசனம் தெளிவான உறுதியான, அறிவுப்பூர்வமான மறுப்பாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

மேலும் குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது இவ்வேதமானது - அல்லாஹ் தனக்கு ஒருமகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்லக்கூடியவர்களை எச்சரிப்பதற்காகவும் இறக்கப்பட்டது என்று கூறுகிறான்.

"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையோனென்றால் தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான் - அதில் எத்தகைய கோணலையும் அவன் ஆக்கவில்லை. மிக்க உறுதியானதாக - அவனிடமிருந்து கடினமான தண்டனையை எச்சரிக்கை செய்வதற்காகவும், நற்செயல்கள் செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி உண்டு என்று நற்செய்தி கூறவதற்காகவும் (இதனை இறக்கினான்) அதில் என்றென்றும் அவர்கள் தங்கியவர்களாக இருப்பர். அன்றியும், அல்லாஹ் மகனை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்) அவர்களுக்கு இதைப்பற்றி எவ்வித அறிவும் இல்லை, அவர்களுடைய மூதாதையர்களுக்கும் இல்லை, அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த வாக்கியம்) மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்.; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. (18 அல்கஹ்ஃப்: 1-5)

ஒரு தனிநபருடைய சந்தோஷமான நிகழ்ச்சிக்கு அவருடைய நண்பரோ அல்லது உறவினர்களோ வாழ்த்து கூற வேண்டும் என்றால் வாழ்த்து கூறுபவர் உளப்பூர்வமாக அந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதில் அவர் திருப்தி கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது உளப்பூர்வமான வாழ்த்தாக அமைவதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அமைந்து விடும்! இது ஒரு நயவஞ்சகத்தனமான செயல்பாடு ஆகும். இத்தகைய போலியான பாசாங்குகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் கூறுகிறான்: "ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆனால், அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை ஏசினான். ஆனால் அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை மறுத்தது, "ஏற்கெனவே இருந்ததைப் போன்று மீண்டும் உயிர் கொடுத்து அவனை எழுப்ப என்னால் முடியாது" என்று அவன் எண்ணியதாகும். அவன் என்னை ஏசியது, "எனக்குக் குழந்தை உண்டு" என்று அவன் சொன்னதாகும். ஆனால், நான் ஒரு மனைவியையோ குழந்தையையோ ஏற்படுத்திக்கொள்வதை விட்டும் தூய்மையானவன் ஆவேன்" (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல் புகாரி - ஹதீஸ் எண் 4482)

ஆக கிறிஸ்துமஸ் விழா என்பது அல்லாஹ்வுடைய மகனாக அவர்கள் ஏற்படுத்திய இயேசுவின் பிறந்த நாளாகும். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லது மறுத்துக் கொண்டு பாசாங்கான நிலையில் அன்றி ஒரு முஸ்லிமால் வாழ்த்து சொல்ல இயலாது. இந்த இரண்டு நிலைகளுமே இஸ்லாமுக்கு முரணானதாகும்.

இது அல்லாமல் கிறிஸ்தவ அன்பர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நன்மை செய்வதையும் நல்லுறவைப் பேணுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனவே உங்கள் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சிக்கு அல்லது விருந்துக்கு உங்களை அழைத்தால் அல்லது அதற்கான உணவுகளை உங்களுக்கு அழைத்தால் அதை மவுனமாக ஏற்றுக்கொள்வதை விடுத்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்பபடுத்தி நேர்வழியின் பால் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதே ஏற்றமான செயலாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நிலைத்திலருக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

http://christianpaarvai.blogspot.com/2010/12/blog-post_20.html

சனி, 4 டிசம்பர், 2010

ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்?

"ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன்" ஒரு சகோதரியிடமிருந்து நமக்கு வந்த கடிதம்!

என்னைக் கவர்ந்த இஸ்லாம்!
-ஹாஜரா (எ) ராஜபுஷ்பம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு. என்னுடைய பெயர் ஹாஜரா. நான் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவள். கிருஸ்த்துவப் பெண்ணாக திகழந்தேன். என் பெயர் ராஜபுஷ்பம். கிருஸ்துவ மதத்தில் அதிக பற்றுள்ளவளாக இருந்தேன். பருவப் பெண்ணாக இருந்தபோது அதிகமாக சர்ச்சுக்குப் போவேன். பிரார்த்தனை பண்ணுவேன். எனது தாய் இறந்த பிறகு எனது அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தேன். எனது அக்கா ஒரு கிருஸ்துவ பையனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 தங்கைகள். அதில் முதல் தங்கை எங்களுக்குத் தெரியாமலே இஸ்லாத்தில் இருந்திருக்கிறார்கள். அது தெரியாமலே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். சிறுவயதில் இருந்தே எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது. அவர்கள் அணிந்து வரும் பர்தாவை நான் "இது என்ன? அங்கி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?" என்று கேலி பண்ணுவேன். எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் கழித்து அவருடைய முதல் தங்கை வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்கள் பர்தா அணிந்து வந்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நான் எனது அக்காவிடம் போய் கூறினேன். அவருடைய முதல் தங்கை முஸ்லிமாக இருக்கிறாள் என்று கூறினேன். அதற்கு எனது அக்கா, அவள் ஒருத்தி தானே அப்படியிருக்கிறாள் - நீ எதையும் கண்டு கொள்ளாதே! என்றும் அவளிடம் பேசாதே! அவளை வீட்டிற்குள் விடாதே! என்றும் கூறினாள். நான் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னால் அவளை வெறுக்க முடியவில்லை. பிறகு அவருடைய முதல் தங்கை என்னையும் இஸ்லாத்திற்கு வரச் சொன்னாள். ஆனால் இஸ்லாத்தின் மீது எனக்கு தப்பான கண்ணோட்டமும், இஸ்லாம்னாலே எனக்கு பிடிக்காது. எனவே அவள் அழைத்ததற்கு நான் வரமாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கணவரின் தங்கை மீதி 4 பேரும் இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று நீங்கள் அனைவரும் எங்களை அநாதையாக விட்டு விட்டு இஸ்லாத்திற்குச் சென்று விட்டீர்களே? ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று கூறினார்கள். பைபிளில் ஒரு தூதரைப் பற்றிக் கூறும்போது அவருடைய வயது 60 ஆகவும் இன்னொரு இடத்தில் 40 ஆகவும் வரும். இவ்வாறு முரண்பாடான சில விஷயங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் குர்ஆன் எந்த வித முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் எனக்கு இஸ்லாத்தின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. எனது கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி கூறினேன். அவரும் இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொண்டார். தொழுவது, வீட்டை விட்டு வெளியேறும்போது, பர்தா போட்டுக் கொண்டு வெளியே போவது, யாராவது வீட்டிற்கு வந்தால் ஸலாம் கூறுவது, குர்ஆன் ஒதுவது, இதுபோன்ற நிறைய விஷயங்கள் இஸ்லாத்தில் பிடித்து இருந்தது. அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று தெரிந்தது. இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று! பிறகு கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நீங்களும் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி :
அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2010/12/blog-post.html

வெள்ளி, 26 நவம்பர், 2010

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

நீதிமன்றத்தில் இவர் 155 சிறுவர்களை பாலியல் கொடுமைகள் செய்ததை மறுத்தார் ஆனால் 1992-2003 காலக்கட்டத்தில் தனக்கு உதவிச்செய்த ஆறு சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மதரீதியான பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் வரை கஸ்டடியிலிருந்த இவரின் பாதிரியார் பதவியை கத்தோலிக்க சபை ரத்துச் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 23 நவம்பர், 2010

இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்

சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.
ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்
எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.
இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.
அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.
ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
tntj.net
http://onlyoneummah.blogspot.com/2010/11/blog-post_10.html

"செவன்த் டே அட்வென்டிஸ்ட்" -வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு

ஓசூர் : ஓசூர் "செவன்த் டே அட்வென்டிஸ்ட்" கிறிஸ்தவ திருச்சபையில், வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் போராட்டம் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஓசூர் அடுத்த மத்திகிரி கூட்டு ரோட்டில், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபைக்கான தென் ஆசியாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தற்போது இந்தியாவுக்கான திருச்சபை நிர்வாக உறுப்பினர் தேர்தல், நேற்று முன்தினம் முதல் துவங்கி நடக்கிறது. தேர்தல் பணிகளை பார்வையிடவும், கூடுதல் நன்கொடை நிதியுதவி வழங்குவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபையின் சர்வதேச தலைவர் வில்சன், அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் ஓசூர் வந்தார். நேற்று, "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாகத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் திருச்சபை தேர்தலை கண்டித்தும், வெளிநாட்டில் இருந்து வரும் பல கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாக உறுப்பினர் வேதமுத்து தலைமை வகித்தார். "செவன்த் டே' கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை தமிழக அரசு தடுக்க வேண்டும்; பாரபட்சமாக நடக்கும் நிர்வாகிகள் தேர்தலை நிறுத்த வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.

நன்றி : தினமலர் - (18-11-1010)

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்-போப் 16ம் பெனடிக்ட்

Pope Benedict XVI


ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

Thursday, November 11, 2010 ஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்


ஏக இறைவனின் திருப்பெயரால்......

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...


சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.

ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.

நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்

எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.

இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.

அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.

“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.

எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.

ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
tntj.net

பாதிரியாரிடம் 21 ஆயிரம் ஆபாச வீடியோ!

ஸ்பெயின் நாட்டில் உள்ள விலா பேம்ஸ் நகரை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மீது செக்ஸ் தொடர்பான புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து அந்த பாதிரியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்த கம்ப்யூட்டரில் ஏராளமான செக்ஸ் வீடியோ காட்சிகள் பதிவு செய்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கம்ப்யூட்டர் கோப்பில் 21 ஆயிரம் செக்ஸ் வீடியோக்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோ காட்சிகள் ஆகும்.

இதையடுத்து பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். செக்ஸ் வீடியோ படம் எடுத்ததற்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து பாதிரியாரை சபையில் இருந்து நீக்க கிறிஸ்தவ டயோசிசன் முடிவு செய்திருக்கிறது.

செவ்வாய், 2 நவம்பர், 2010

பாதிரியர்களின் பாலியல் சித்திரவதைகள் :13 நாடுகளை சேர்ந்தவர்கள் வாடிகனில் போராட்டம்


வாடிகன்,நவ அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளிடம் செக்ஸ் சித்ரவதை செய்ததாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது புகார்கள் கூறப்பட்டன.

கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது. எனவே இந்த புகாரில் சிக்கிய பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரில் கூடினர். பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செக்ஸ் புகாரில் சிக்கிய பாதிரியார்கள் மீது போப் ஆண்டவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு நடந்தது. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திங்கள், 25 அக்டோபர், 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார். வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்



திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, பிரான்சிஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கரு கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிரான்சிஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.


புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.


திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது கூல்ரிங்ஸ் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.


இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கற்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.



திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.


புகாரை ஏற்ற போலீசார், பிரான்சிஸ் மேரி மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பெண்களின் நிலை - ஹிந்து மதத்தில்!




மனுஸ்மிர்தி கூறுகின்றது:

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

பிராமணர்களின் கைகளிலிருந்து இயங்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஷாபானு வழக்கில் தங்களது துறுத்திகளை அளவுக்கு மீறியே ஊதின.

அத்தனைப் பத்திரிக்கைகளும் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசின. ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கி இருக்கின்றது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்ததில்லை. அதற்கான சில தகவல்களைத் தருகின்றோம்.

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது

அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது. அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது. அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

ஹிந்துக்கள் இந்தக் கொடுமையைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இது பத்திரிக்கைகள் நாள் தவறாமல் தரும் செய்தி.

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

பிராமணர்களின் பத்திரிக்கைகள் இத்தனையையும் மறைத்துவிட்டு முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசி நம்மை திசை திருப்பி விட்டன.

உடன் கட்டை ஏற்றும் கொடுமை

ஓர் ஹிந்துவின் மனைவி இறந்து விட்டால் அவன் தாரளமாக ஒரு பெண்ணை வேண்டும் போல் வரதட்சணை வாங்கி மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஹிந்து பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளை அந்த கணவனோடு சேர்த்து எரித்தேயாக வேண்டும்.

ஹாரியவின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள்.

அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம்.

பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்: வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஒரு பெண்ணின் கணவன்-பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்விட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும்.

''உடன் கட்டை ஏறுதல்" – 'சதி" அந்த மாதாவுக்கு ஜே! 14-9-87இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் பின்வரும செய்தியைத் தருகின்றது.

ஜெய்ப்பூர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

18 வயதான இந்தப் பெண்ணின்பெயர் ரூப்கான்வர். இவளது கணவன் மான்சிங் மருத்துவமனையிலிருந்த போது இறந்து விட்டான்.

மான்சிங்கின் உடல் அவருடைய சொந்த ஊரான திர்வாலாவுக்கு எடுத்து வரப்பட்டது. எரிய+ட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ரூப்கான்வர் தானும் அதனுள் ஏறி தன்னையும் எறித்துக் கொண்டாள். அந்த கிராமத்து மக்களுக்கு அவள் உடன்கட்டை ஏறப்போகின்றாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால், அங்கு பெருவாரியாக குழுமி இருந்தார்கள். பலர் முழக்கங்களை எழுப்பி அதனை வரவேற்றார்கள்.

உடன்கட்டை ஏறிய இந்தத் தகவல் காவல்துறைக்கு மிகவும் காலதாமதமாகவே கிடைத்ததாம். அவர்கள் ரூப்கான்வரை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்திய மான்சிங்கின் உறவினர்கள் 4 பேர் மீத வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்தார்களாம்.

இப்படி கணவனோடு எரிய+ட்டப்பட்ட ரூப்கான்வர் மணமகளாக வரும்போது ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சமும், 23 தோலா தங்கமும், டிவி குளிர்சாதன பெட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்தாளாம்.

இது சம்பந்தமாக சீட்டா சிங் என்ற கிராமத்து ஆசிரியர் ஒருவரைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.

ரூப்கான்வர் உடனேயே உடன்கட்டை ஏறாவிட்டாலும் அவளுக்கு வேறு வாழ்க்கை கிடையாது. ஹிந்து சமுதாயத்தில் மறுமணம் என்பதற்குத்தான் வாய்ப்பே கிடையாதே!

இன்னும் அந்த ஆசிரியர் கூறுகின்றார்:

சமுதாயம் ஒரு விதவையை 'குலச்சனி" என்றே கூறுகின்றது. அவள் தேவை இல்லாத ஒரு பொருளாதார சுமை! அவள் பாதங்களில் செருப்பு அணிந்து கொள்ளக் கூடாது. அவள் வெற்றுத் தரையில் தூங்க வேண்டும். அவள் வெளியே வர முடியாது. அவள் வேறு ஆடவரோடு பேசக்கண்டால் அவள் மீது ஐயமும் அவதூறும் பாயும். அவள் அத்தகையதொரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது எவ்வளவொ உத்தமம்.

உடன் கட்டை ஏறுவது கட்டாயத் தேவை

ராய்டர் செய்தி நிறுவனம் 25-9-87இல் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறுகின்றது.

ரூப்கான்வர் விருப்பப்படி உடன்கட்டை ஏறவில்லை. அவள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்தாள். ஆனால் அவள் கடைசி வரை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திக்கப்பட்டாள். இன்னும் சில கிராமவாசிகள் கூறுகின்றார்கள்: ரூப்காள்வர் எரிந்து கொண்டிருந்த தணலில் திணிக்கப்பட்டாள். அவள் கடைசி வரை தனது உயிருக்காகக் கதறினாள்.

காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் ரூப்கான்வர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது உண்மை என்றும், தெளிவாகத் தெரியவந்தது. இது காவல்துறையில் 4-10-87 தகவலறிக்கையில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

மிகவும் கோரமானதோர் தகவலையும் காவல் துறையின் தகவலறிக்கை தெரிவிக்கின்றது.

ரூப்கான்வர் தன்னைச் சுற்றி இருந்த கட்டைகளை தீ வைக்கப்படும் முன் அவற்றிலிருந்து தப்பித்துவிட முயன்றாள். ஆனால் அவளுடைய கழுத்துவரை கட்டடைகள் அடுக்கப்பட்டிருந்ததால் அவளால் எதுவும் செய்திட இயலவில்லை. அவள் அழுத போது கருணை கேட்டு மன்றாடியபோது சுற்றி நின்ற ஹிந்து பெருமக்கள் அவள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றாள் என்றார்கள்.

அவளுடைய அழுகுரல் வெளியே கேட்காத அளவில் சுற்றி நின்றவர்கள் சதி மாதாவுக்கு ஜே! என அலறி அவளது அபயக்குரலை வெளியே கேட்காமல் அடக்கிவிட்டார்கள்.

சட்டத்தின் பிடியில் பிடிபடாமலிருக்க எல்லோரும் அவளது வயது 18 முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அவளது பள்ளிச் சான்றிதழ்கள் படி அவளது வயது 15 மட்டுமே!

கல்கத்தாவைச் சார்ந்த பெண்கள் இயக்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் 'சதி" என்ற உடன்கட்டை ஏறுதல் மணமகனின் வீட்டார் காட்டும் பிடிவாதத்தால் தான் நடைபெறுகின்றது. இதில் விதவையாகிவிட்டவள் காட்டும் எதிர்ப்பை அவள் கருணைகாட்ட சொல்லி வடிக்கும் கண்ணீரை யாரும் ஏறெடுத்தப் பார்ப்பதில்லை.

இந்தியாவில இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இன்றுவரை யாரும் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை.

இதே ரூப்கான்வர் ஒரு விபத்தில் இறந்திருந்தால் அவளது கணவன் நெருப்பின் நடுவே அமர்ந்து மாண்டிருக்கமாட்டான். மாறாக அவன் மணப்பந்தலில் அமர்ந்து இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்திருப்பான். இந்த இரண்டாவது திருமணத்திற்காகவும் அவன் இன்னொரு லட்சம் ரூபாயை வரதட்சணையாய் பெற்றிருப்பான்.

இதில் இன்னும் கொடுமை என்னவெனில் மான்சிங்கின் இல்லத்தார் ரூப்கான்வர் எரிந்து முடியும்வரை இந்த தகவல் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியாமல் தடுத்துவிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் தான் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியும். அதன் பின்னர் தான் காவல் துறைக்குத் தெரியுமாம்.

ரூப்கானவரின் பெற்றோர்கள் தங்களது ஒரே மகளை இவ்வளவு கோரமாக இழந்து கதறி அழுதனர். இத்தனைக்கும் காரணம் எந்த அடிப்படையும் இல்லாத ஹிந்து மதத்தை அவர்கள் சார்ந்திருந்தது தான்.

ஹிந்துப்பெண்ணாக இருப்பது ஒரு சாபக்கேடு!

டாக்டர் லட்சுமி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு பிராமணப் பெண். இவர் பிராமணப் பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றார். அதில்

பிராமணப் பெண்கள் தங்கள் தயக்கங்களிலிருந்து வெளி வந்து ஹிந்து மதம் பெண்களுக்கெதிராக வகுத்துள்ள விதிகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார்.

ஜாதகப் பொருத்தம், வரதட்சணை, சீரம் வரிசையும் பிராமணப் பெண்களை 30 வயதுக்குள் திருமணம் செய்ய விடுவதில்லை.

டாக்டர் லட்சுமி அவர்களே 37வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

இதனால் பலர் கற்பிழக்க வேண்டியதிருக்கின்றது திருமணத்திற்கு முன்னால்

இதற்குக் காரணம் பிராமண ஆண்களே?
!

Source: உண்மை இஸ்லாம்,nidur.info

புதன், 29 செப்டம்பர், 2010

இஸ்லாமிய வங்கி முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது

உலகம் முழுவதும் இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு அதி வேகமாக வளர்ந்து வருவதாக மாலிக் சர்வார் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிக முக்கிய வங்கியான அபுதாபி இஸ்லாமிய வங்கியின் முக்கிய தலைமை பிரதிநிதிகளில்ஒருவர் ஆவார்.

நிகழ்ச்சி ஒன்றில் பன்னாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இவர் "உலகம் முழுவதிலும் பொருளாதார பின்னடைவு நேர்ந்து வரும் வேளையிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 1 ட்ரில்லியன் இருக்கும் இந்த முதலீடு 2015க்குள் 2.7 ட்ரில்லியன் தொட்டுவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ஆகும்). வருடா வருடம் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி இரட்டை இலக்கமுடைய வளர்ச்சியாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி பத்து மடங்காக வளர்ந்து உள்ளது" என்றுள்ளார்.

மேலும் வெளிப்படையான அறங்காவல், நெறியான நடைமுறை மற்றும் இஸ்லாமிய முறைப்படி தீர்வுகள் எதிர்பார்க்கும் வாடிக்கைக்காரர்களால், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களால் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மேரி மக்கில்லோப் கிறிஸ்தவ புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியவர்

சிட்னி,செப்.26:ஆஸ்திரேலியாவின் முதல் கத்தோலிக்க பரிசுத்தராக அறிவிக்கப்படவுள்ள மறைந்த கன்னியாஸ்திரி புரோகிதர்களின் சிறுவர் பாலியல் பலாத்காரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என எ.பி.சி டாக்குமெண்டரி கூறுகிறது.

கல்வித் துறையில் பணியாற்றியவரும், சிஸ்டர்ஸ் ஆஃப் தின் செண்ட் ஜோஸஃப் ஆஃப் தி ஸேக்ரட் ஹார்ட் என்ற அமைப்பின் ஸ்தாபகரான மேரி மக்கில்லோப்பிற்கு போப் பெனடிக்ட் அடுத்தமாதம் பரிசுத்தர் பட்டத்தை வழங்கவுள்ளார்.

ஆனால், இவர் தனது வாழ்நாளில் புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியதால் சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என்ற செய்தியை எ.பி.சி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கில்லோப்பிற்காக பரிசுத்தர் பதவிக்கு பிரச்சாரம் நடத்தியிருந்த ஃபாதர் பால் கார்டினர்தான் ஆவணப்படத்தில் இதனை
வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கில்லோப்பும் இதர கன்னியாஸ்திரிகளும் புரோகிதர்களுக்கெதிராக பாலியல் புகார்களை மேலதிகாரிகளுக்கு அளித்தத்தைத் தொடர்ந்து ஒரு புரோகிதரை அயர்லாந்துக்கு அனுப்பினர். வேறு சிலருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மக்கிலோப்பை பழிவாங்குவோம் என சம்பந்தப்பட்ட புரோகிதர்கள் முடிவுச் செய்தனர்.

மக்கிலோப்பிற்கு அவமரியாதைச் செய்ய அன்றைய பிஷப் அடலைட் லாரன்ஸ் ஷீலினிற்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது.

1871 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. ஐந்து மாதத்திற்கு பிறகு தனது மரணப்படுக்கையில் வைத்து பிஷப் மக்கிலோப்பை மீண்டும் அழைக்க தீர்மானித்தார். 1909 இல் மக்கிலோப் மரணித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

விடுதி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகரில் உள்ள தோட்டத்தில் கிறிஸ்தவ ஜெபகூடம் மற்றும் அனாதை விடுதி உள்ளது. இதை அன்புநகரைச் சேர்ந்த போதகர் சவுந்திர ராஜன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தர்மபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் தங்கி அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். மொத்தம் 12 மாணவிகள், 22 மாணவர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பாலியல் தொல்லை குறித்து அவரது தந்தையிடம் கூறவே அவர் சென்ற வாரம் தனது மகளை விடுதியில் இருந்து அழைத்து சென்றுவிட்டார். இது குறித்த தகவல் தட்டார்மடம் போலீசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தியபோது முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ், வருவாய் ஆய்வாளர் விஜய குமாரி, வி.ஏ.ஓ. வேல்சுந்தரம் ஆகியோர் மணி நகரில் உள்ள அந்த விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் பலர் விடுதியில் நடந்தவற்றை கூறி அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனையடுத்து அங்கு தங்கி படித்து வந்த 12 மாணவிகள், 22 மாணவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விடுதி காப்பாளர் சவுந்திர ராஜன், அவரது மகன் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுந்திராஜனின் இன்னொரு மகன் உதய பாலஜெயசி்ங்கை தேடி வருகின்றனர்

புதன், 22 செப்டம்பர், 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக
(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)





1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கிறிஸ்தவ சகோதரர்களே பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?

அப்பாவைக் கற்பழித்த மகள்கள்

ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய
...
31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்- கேரளாவில் மீண்டும் சர்ச்சை

திருவனந்தபுரம், செப். 1-
கேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார்.
அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அவர் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்து அதில் இருந்து விலகியவர். தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.
அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
புத்தகத்தில் பாதிரி யார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.
பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.
இந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 1 செப்டம்பர், 2010

நினைவெல்லாம் நித்யா

பெங்களூர் M.Sகமாலுத்தீன்

“உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம் கழுத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோரமுகங்களில் ஒன்று மன அழுத்தம் (Tension). ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர்கள் மன அழுத்தத்தால் மருத்துவர்களை நாட, திகைத்து போனது மருத்துவ உலகம். மருந்து கண்டுபிடிக்க கால அவகாசம் எடுத்த நேரத்தில் நீண்டது வரிசை. அழுத்தம் தாங்காமல் அலறினார்கள் பலர். சிலர் சுய வைத்தியமாக “தற்கொலை’ செய்துகொள்ள ஆன்மீகத்தை நாடும்படி அறிவுறுத்தப்பட்டது. துரித உணவு (Fast food) கலாசாரத்தில் பழகிப் போனவர்கள் ஆன்மீகத்திலும் அதையே எதிர் பார்த்தார்கள். அங்குதான் போனியாகாமல் கிடந்த யோகா (Yoga)வுக்கு புது வாழ்வு கிடைத்தது.

இந்து மதத்தின் மிகச்சிறந்த கலையாக யோகா முன் நிறுத்தப்பட்டது. இதைக் கற்றுக் கொண்டால் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடலாம். ஆயுள் அதிகரிக்கும், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என சொன்னதோடு நில்லாமல் ஊடகங்கள் மூலம் உயர்த்தியும் பிடித்தார்கள். “அவாள்’ நடத்தும் பத்திரிக்கைகளில் முன்னுரிமை தந்தார்கள். சிறு செய்திகளையும் கட்டம் போட்டு கவனம் ஈர்த்தார்கள். விளைவு பலர் காவி உடை தரித்து களம் இறங்கி கோடி கோடியாகக் காசு பார்த்தார்கள். அத்தகையவர்களில் ஒருவன்தான் திருவண்ணாமலையை சேர்ந்த அருணாச்சலம் முதலியாரின் மகன் ராஜசேகர்.

ஜெயின் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியை முடித்து, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் டிப்ளமோவை அரைகுறையாக முடித்து 16 வயதில் வீட்டை விட்டு ஓடி சாமியார்களிடம் சில சித்து விஷயங்களை கற்று புத்தாயிரம் தினமான 2000 ஜனவரி 1ம் தேதி ஞானம் பிறந்ததாக பொய் சொல்லி “பரம ஹம்ஸா நித்யானந்தாவாக’ தன்னை அறிமுகம் செய்து கொண்டு 2003ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் முதல் ஆசிரமத்தை பெங்களூர் புறநகர் பகுதியான “பிடுதி’யில் 14 ஏக்கரில் தலைமை நித்தியானந்த பீடம் அமைத்தது வரை சந்தேகம் ஏற்படாத கெட்டிகாரத் தனம். இது பிரசங்கத்திலும் தியானம், யோகா, ஹீலிங் பயிற்சி தருவதிலும் தென்பட்டது.

முப்பத்தி மூன்று நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கிளைகளையும் இருபது ஆயிரம் கோடி சொத்து மதிப்போடு இயங்கிய 2010 ஆசிரமத்தின் கதவை திறந்தால் காற்று வரவில்லை. காமக் காட்சிகள் தான் சி.டி.யாக வெளி வந்தன. மார்ச் 3ம் தேதி நக்கீரன் இதழிலும 4ம் தேதி சன் தொலைக் காட்சியிலும் கண்றாவிக் காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களை கொதிப்படைய வைத்தார்கள். ஆசிரமங்கள் அமைந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் காரித் துப்பி செருப்பால் அடித்து தீ வைத்தார்கள். சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக் கூடாது, தொடக்கூடாது ஏன் பெண் வாசனையே கூடாது என வழிமுறை வகுத்தவன் தன் தியான கூட்டத்துக்கு வரும் அழகான பெண்களை கட்டிப்பிடித்து ஆசீர்வதிப்பான்.

ஆசிரமத்தில் நூறுக்கும் மேற்பட்ட இளம் சந்நியாசினிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் “நான் கிருஷ்ணனின் அவதாரம்; நான் கொஞ்சும் பெண்கள் எல்லாம் கோபியர்கள். உங்கள் நினைவெல்லாம் நித்யாவாக இருக்க வேண்டும், அது உங்கள் பெயர்களிலும் பிரதி பலிக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஆனந்தமடையும், அது ஞானத்தை அடைய வழிகாட்டும்; என் நிலையே நீ அடைய என் விருப்பத்தை நிறைவேற்று.’

தெய்வத்தோடு இரண்டரக் கலப்பதாக நினைத்துக்கொண்டு பல இளம் பெண்கள் கற்பை இழந்த கதைகள் நிறைய உண்டு, பல ஆயிரம் சீடர்கள் தங்கள் வாழ்வை இவனுக்காக அர்ப்பணித்ததன் மூலம் ஆன்மீகத்தில் ஏதோ சாதித்து விட்டதாக மனப்பால் குடித்துள்ளார்கள். எந்த மன நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நித்யானந்தாவை தேடி வந்தார்களோ அவர்களில் சிலருக்கு இவன் பொய்யன் என்பது புலனாகியது. அவர்கள் வெளியேற முயற்சிக்க சிலர் கொலை செய்யப்பட்டார்கள். அது தற்கொலையாக பதிவு செய்து கொண்டது போலீஸ்; வெளியேறும் எண்ணமுடைய பலர் உயிர் வாழ ஆசைப்பட்டு ஊமையானார்கள்.

ஊர் ஊராக சென்று “சத்சங்கம்’ நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் பொருளாதாரம் சுரண்ட புதிய சீடர்கள் கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். தன் சூன்ய பேச்சால் சீடர்களை சுத்தமான மடையர்களாக்குவதன் மூலம் தன் சுக வாழ்வின் எல்லை விரிந்து கொண்டே போகும். இதுதான் 99 சதவிகித சாமியார்களின் இலக்கு. இதற்காக இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இவர்களை மக்கள் முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும், காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகளாக நம்பி மோசம் போகிறவர்களை யார் காப்பாற்றுவது?

இறைக் கொள்கை சரியில்லாத எல்லா மதங்களிலும் ஏமாற்று வேலையுண்டு. இந்து மதத்தில் இது சற்று அதிகம். சிக்குவது சிலர்தான். மடங்களிலும், ஆதினங்களிலும் சிக்க வேண்டியவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள். இவர்கள் சிக்கினாலும் கூட ஒருமாத பரபரப்புச் செய்தி அவ்வளவே! இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

1431 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் மிக தெளிவாக சொல்லிவிட்டது இப்படி; “துறவித் தனத்தை நாம் (அகில உலகத்தின் இறைவனாகிய அல்லாஹ்) அவர்கள் மீது கடமையாக்கவில்லை. அதனை அவர்களே கடமையாக்கிக் கொண்டார்கள். அதனை பேண வேண்டிய அளவுக்கு அவர்கள் சரிவரப் பேணவில்லை’ (திருகுர்ஆன் 57:27)

32 வயதுக்குள்ளாக புகழின் உச்சத்தை அடைந்த நித்யானந்தா இல்லறத்தில் பகிரங்கமாகவே ஈடுபட்டிருக்கலாம். திருமணத்தை யாரும் தடுக்கப்போவதில்லை. போலியான வழிமுறையை உருவாக்கி கொண்டு பொய்யும் புரட்டையும் மூலதனமாக்கி கொண்டு ஞானம் அடைந்து விட்டதாக சொல்வது மிகப் பெரிய ஏமாற்று வேலை. ஆசை, பாசம், அன்பு, கோபம், மகிழ்ச்சி இவை எல்லாம் மனித இயல்புகள். இதை மீறி வாழ முடியாது. இதை ஊருக்கு உபதேசிப்பவனும் ஒழுங்காக பின் பற்ற முடியாது என்பதை நித்தியானந்தா விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இஸ்லாத்தில் இத்தகைய மோசடிகள், ஏமாற்று வேலைகள் என எதுவுமில்லை. எல்லாமே மிகத் தெளிவானவை. அப்படியானால் முஸ்லிம்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?! இறைப் புகழ்ச்சியும் உடல் பயிற்சியும் இணைந்த தொழுகையும் “துஆ’வும்தான் மன நிம்மதியை தருகிறது. ஐவேளை தொழுகை தரும் ஆறுதலை எந்த தியானமும், யோகாவும் தந்துவிடாது. இதை 1431 வருடங்களாக முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தங்கள் பொருளாதாரமும் பொன்னான வாழ்வும் ஆன்மீக ஆசாமிகளிடம் அடகு வைத்து விடாமல் அரணாக இஸ்லாம் காக்கிறது.

சகோதர சமுதாயத்தவர்களுக்கு நாம் சொல்வது இதுதான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! இவ்வுலகிலும் மறு உலகிலும் மகத்தான வெற்றி பெறுவீர்கள். இந்த நிஜமான வெற்றியை யாரும் பெற்றுத் தந்துவிட முடியாது. இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே நிஜமான ஆன்மீக வெற்றி சாத்தியம். இது பற்றி இறுதி நெறிநூலான திருகுர்ஆன் சொல்கிறது இப்படி;

“இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வோர் உதாரணத்தையும் அவர்கள் உபதேசம் பெறுவதற்காகத் திட்டமாக நாம் விளக்கியுள்ளோம்’ (குர்ஆன் 39:27) “மனிதர்களே! உங்களுடைய (ஒரே) இறைவனை வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான்; (அவனை வணங்குவதால்) நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்’ (உங்கள் இறைவனாகிய அல்லாஹ்) அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் கனி வகைகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான்; எனவே (இவற்றை) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும், எவரையும் இணை ஆக்காதீர்கள். (திருகுர்ஆன் 2:21,22)

இன்னும் (இந்நெறிநூலின் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு அதன் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனச் சோலைகள் நிச்சயம் அவர்களுக்கு உண்டு என்று (இறைத்தூதரே!) நற்செய்தி கூறுவீராக (நெறிநூல் 2:25) இந்த மகத்தான வெற்றியின்பால் அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள்!

யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு!

14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் 30.08.2010 திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம்.

1. முஹம்மது இர்சாத் மர்பாய் - 20 அல்ஜீரியா - 2,50,000 திர்ஹம்

2. மஸ்வூத் ரித்வான் -13, வங்கதேசம் - 2,00,000 திர்ஹம்

3. முஸ்அப் ஈஸா அலி - 20, பஹ்ரைன் - 1,50,000 திர்ஹம்

4. அஹமது யசூரி முஹம்மது 18, எகிப்த் - 65,000 திர்ஹம்

5. காலிது அபூபாகிர் ஸலிம் 19, யமன் - 60,000 திர்ஹம்

6. கலீல் இப்ராஹீம் அஹமது 20, லிபியா - 55,000 திர்ஹம்

7. மப்வானா அஸா மப்வானா, 15 - தான்சானியா - 50,000 திர்ஹம்

8. அம்மார் ஸாலீஹ் அத்தீன் 16, ஸவுதி அரேபியா - 45,000 திர்ஹம்

9. நாசர் பதிர் முஹம்மது 20, குவைத் - 40,000 திர்ஹம்

10. முஹம்மது அல் அத்ராஸ் 16, மொராக்கோ - 35,000 திர்ஹம்

10. முஹம்மது உதுமான் அப்துல்லாஹ் 18, சூடான் - 35,000 திர்ஹம்

மேலும் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 30,000 திர்ஹம்

70 - 79 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 25,000 திர்ஹம்

70 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 20,000 திர்ஹம் என வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் அமீரகப் போட்டியாளர்களும் அரபுலக போட்டியாளர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தட்டிச் சென்றிருப்பது, இந்தப் போட்டியில் வங்கதேச போட்டியாளர்கள் தொடர்ந்து ஏதேனும் பரிசுகளை வெல்வது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பம்சமாக சிறந்த இஸ்லாமியன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த முன்னால் அதிபர் ஃபீல்டு மார்ஸல் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய உலகத்திற்கு பயன்படுத்தும் விதமாக இவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசளிக்கப்பட்டது.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?


குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா?

சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள்.

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.

சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.

Quran or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.

கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.

இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.

முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம். சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 3



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 4




QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 5


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 6



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 7


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 8


அசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்
இதிலுள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிட‌மிருந்து வ‌ந்த‌து என‌ கூற‌லாமா?

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது

யாருடைய உண்ர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை

பைபிளில் விஞ்ஞான‌ பிழைக‌ள்.

பூமி அழியுமா? அழியாதா?

இவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.

ஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.
அப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.
அப்படித்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன‌
என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்
நவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.

மேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.

வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.
இதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 9


தொழுநோயிலிருந்து த‌ன் வீட்டை பாதுகாக்க‌ ஒரு நூத‌ன்மான‌ வ‌ழியை பைபிள் சொல்லுகிற‌து இர‌ண்டு குருவிக‌ளை எடுங்க‌ள் ஒன்றை கொன்று ம‌ர‌த்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு ப‌ற‌வையை ஓடும் நீரில் ந‌னைத்து அத‌ன் பிற‌கு அந்த‌ ர‌த்த‌த்தை வீடு முழுவ‌தும் ஏழு முறை தெளிக்க‌ வேண்டும்.

தொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா?

மருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.

ஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.

ஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.

பெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி?

விபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி ?

எண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31

என்ன அருமையான வழி?

சந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது?

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 10



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 11



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 12



நிறைவேறாத தீர்ககதரிசனம்.

பைபிள் இறைவ‌னின் வார்த்தைக‌ள் அல்ல‌

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 13


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 14

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 15



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 16



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 17


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 18




இதை ஆங்கிலத்தில் காண
சுட்டி http://thegrandverbalizer19.blogspot.com/2009/11/debate-quran-and-bible-in-light-of.html

----------------
இந்த ஆக்கத்தை தயவு செய்து தங்களுடைய இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.