வெள்ளி, 26 நவம்பர், 2010

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

நீதிமன்றத்தில் இவர் 155 சிறுவர்களை பாலியல் கொடுமைகள் செய்ததை மறுத்தார் ஆனால் 1992-2003 காலக்கட்டத்தில் தனக்கு உதவிச்செய்த ஆறு சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மதரீதியான பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் வரை கஸ்டடியிலிருந்த இவரின் பாதிரியார் பதவியை கத்தோலிக்க சபை ரத்துச் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக