புதன், 7 செப்டம்பர், 2011

R.S.S முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்.

முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்.
வேலாயுதன் என்ற பிலால்.


அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள்.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - முன்னுரை.


"கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது.

ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள் (பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது.

ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்: நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள இஸ்லாமே நன்மருந்து. தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்." - வேலாயுதன் என்ற பிலால்.

முன்னாள் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த வேலாயுதனின் வாசகங்கள் இவை.

ஆர் எஸ் எஸ்ஸில் முழு நேர ஊழியனாக பணியாற்றியதிலிருந்து எர்ணாகுளம் கவுன்சிலர் பதவிக்கு பாஜக வின் சார்பாக போட்டியிட்டது வரை முழுமையாக ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து

இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன் தனது வாழ்க்கைப்பயணத்தில் தான் சந்தித்த சில முக்கிய கால கட்டங்களைக் குறித்து மனம் திறக்கும் நூல் இது.

ஆரம்பத்தில் வறுமை என்னும் அரக்கனின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து சின்னாபின்னமாகிப் போன தனது இளம் வயது குடும்ப வாழ்வைக் குறித்து அவர் விவரிக்கும் பொழுது நமது கண்களில் கண்ணீர் திரைமாலை இடுகிறது.

பின்னர் ஆர் எஸ் எஸ்ஸின் வெளிப்புற செயல்பாடுகளால் கவரப்பட்டு ஆர் எஸ் எஸ்ஸில் இணைந்த காலகட்டத்திலும் பின்னர் அதனுள் தீவிரமாக செயல்பட்ட காலகட்டத்திலும் அவர் ஆர் எஸ் எஸ்ஸை நேசித்த வீரியத்தைக் குறிப்பிடும் போது கண்களில் நிற்கின்றார்.

ஆர் எஸ் எஸ்ஸிற்காக ஒருவரை கொலை செய்ய போய் அதில் காலை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தன்னை கைகழுவிய ஆர் எஸ் எஸ், அதன் சுயரூபத்தை தொடர்ந்த நாட்களில் அனுபவப்பட நேர்ந்த போது தான் அடைந்த துன்பங்களை அவர் விவரிக்கும் பொழுது நெஞ்சடைக்கிறது.



TO READ MORE
PLEASE CLICK THE LINK


http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/rss.html

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

காப்பக சிறுவர்களிடம் செக்ஸ் சில்மிஷ‌ம் நடத்திய பாதிரியார்!

சிறுவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு பாதிரியாரின் காப்பகத்தை அதிகாரிகள் அதிரடியாக இழுத்து மூடினர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜோனதன் ராபின்சன். 1995ம் ஆண்டு வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயில் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் காப்பகத்தில் பாதிரியார் ஜோனதன் ராபின்சன் பல்வேறு மோசடிகள் செய்து வருவதாக இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து, அந்த அமைப்பு ராபின்சனைக் கண்காணிக்க பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் உதவியைக் கேட்டது. ஜஸ்டிஸ் அண்ட் கேர் நிறுவனமும், கடந்த 6 மாதங்களாக ராபின்சனைக் கண்காணித்து இங்கிலாந்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு அறிக்கை அனுப்பியது. அதில், "காப்பகத்தில் சில மாணவர்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். போலியான ஆவணங்கள் தயாரித்து சிலரை இங்கிலாந்து அனுப்பி உள்ளார். ஒரு மாணவனைச் சட்டப்பூர்வமாக தத்து எடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இங்கிலாந்து அமைப்பின் இந்திய பிரதிநிதியான ராக்சுகுரன் வள்ளியூர் காவல்துறையில் பாதிரியார் ராபின்சன் மீது புகார் செய்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிரியார் ராபின்சன் மாணவர்களை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கிய போது அவர்களுடன் மாணவர்களை ஓரினசேர்க்கை உறவுக்குக் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் அதிகாரிகள் அந்தக் காப்பகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அதை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அங்கு தங்கியிருந்த 10 மாணவிகள், 21 மாணவர்கள் நெல்லையில் உள்ள சரணாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாதிரியார் ராபின்சன் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை இன்டர்போலின் (சர்வதேச காவல்துறை) உதவி மூலம் தான் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு வர முடியும். இதற்காக பிரிட்டிஷ் தூதரகத்தை அணுகி அவரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.