செவ்வாய், 4 டிசம்பர், 2012

நான் மதம் மாறினேனா??

அன்பான சஹோதரர்களே 

சாந்தமும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக !
ஒரு சஹோதரன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த இடுகை இடப்பட்டுள்ளது .இதோ அவரின் அனுபவம் .
அனைத்து சஹோதர சஹோதரிகளுக்கும் அன்பான வணக்கங்கள் .

நான் மதம் மாறினேன் என யாரும் சொல்லாதீர்கள் .நான் என் தாய் மதத்தை தெரிந்து கொண்டு அதன் பக்கமே சென்று விட்டேன் என்பது தான் உண்மை .ஆம் எல்லோரும் ஒரே மார்க்கத்தை பின்பற்ற படைக்கப்பட்டு பின்னர் மனிதன் தன் மனம் போன போக்கில் பல மதங்களை உருவாக்கி விட்டான் .அந்த வழியில் வந்த நான் மறுபடியும் சொந்த மார்க்கத்தை அடைந்து விட்டேன் .
நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் ? என்பதை உங்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை வட்டம் முத்துலிங்க புறம் என்ற கிராமத்தில் பிறந்த நான் செந்தில் குமார் என்ற பெயர் வைத்து அழைக்கப்பட்டேன் .
சிறு வயது முதலே அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவனாக இருந்தேன் .
எனது குல தெய்வம் கருப்பு சாமி என்ற கடவுள் என எனக்கு பயிற்றுவிக்க பட்டது .அந்த கடவுளுக்கு சாராயமும் ,சுருட்டும் படைக்க பட்டது என்னை அந்த சிறு வயதிலேயே சிந்திக்க வைத்தது .வழி நடத்துபவன் இறைவனா?? இல்லை வழி கெடுப்பவன் இறைவனா?? என ..
சில நேரங்களில் பெரிய கோவில்களுக்கும் போனது உண்டு அச்சமயத்தில் இறைவனை தரிசிக்க பாமர மக்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கும் போது பணம் படைத்த மக்கள் நேரடியாக கர்ப்ப கிரகத்திற்குள் நுழைவதையும் ,சில கோவில்களில் ,கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை .
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் காலேஜ் ல் B.E  சேர்ந்தேன் .அப்போது கோவில்களுக்கு போவதை அறவே நிறுத்திவிட்டேன் .
ஆனாலும் கடவுள் நம்பிக்கை என்னை விட்டு அகலாமல் ஆழப்புதைந்து கிடந்தது .மனிதன் படைத்த கடவுள்கள் தான் இப்படி தீண்டாமை ,வாழ்விற்கு பொருந்தாத வழிகாட்டல்கள் ,வர்ணாசிரமம் என மனித குலத்தை சீரழிக்கும் கொள்கைகளோடு இருக்கும் ஆனால் மனிதனை படைத்த கடவுள் கண்டிப்பாக இவர்கள் கூறும் இலக்கணத்தின் படி இருக்காது  எப்படியேனும் அந்த கடவுளை நான் கண்டறிவேன் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது .
எனது கல்லூரி படிப்பும் முடிந்தது ,அதுவரை கல்லூரியில் எனக்கு வெறும் அறிமுகம் மட்டுமே ஆன ஒரு நண்பருடன் கல்லூரி படிப்பு முடிந்ததும்,அவருடனே தங்கும் ஒரு வாய்ப்பை நான் தேடிய அந்த இறைவன் உருவாக்கி கொடுத்தான் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது .
ஆம் அவர் மூலமாக எனக்கு இறைவனை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது ,அவர் கூறினார் எது உன் இறைவன் என நீயே தேடி கொள் உனது பகுத்தறிவை கொண்டு என .

ஆம் .தெள்ள தெளிவான பதில் .இவர் தான் இறைவன் என கூறாமல் இவைதான் இறைவனின் தன்மைகள் என கூறிய விதம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு கண்டிப்பாய் புரியவேண்டும் .
சில சமயங்களில் கிறிஸ்தவம் கூறும் கடவுள் உண்மை என நினைக்க தோணும் ஆனால் கடவுளின் தன்மைகள் தெரிந்த எவரும் அதை ஒருகாலும் ஏற்றுகொள்ள மாட்டர் .
அந்த நேரத்தில் பகுத்தறிவு அறிஞர் பெரியார் தாசன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது .
அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தின் கௌரவ பேராசிரியர் ,பிரபல திரைப்பட நடிகர் ,தனது 23 ம் வயதில் கிருபானந்த வாரியாருடன் மேடை விவாதம் கண்டு வென்றவர் .பத்து வருடம் ஆய்வு செய்து தனது கடவுளை கண்டு கொண்டது எனது ஆர்வத்தை தூண்டியது .
நான் கண்ட ஆய்வு 
நான் தேடிய கடவுள் இந்து மதத்தில் இல்லை என்பது தெரிந்து விட்ட பின் எனது கேள்விக்கு கிறிஸ்தவம் பதில் கொடுக்குமா என பார்த்தேன் ஆனால் அங்கேயும் அது இல்லை 
கடவுள் ஒருவன் தான் இருக்க முடியும் ,
அவனுக்கு பெற்றோரோ ,குடும்பமோ ,பிள்ளைகளோ இருக்கும் என்பது முட்டாள் தனமான நம்பிக்கை .
கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
கடவுள் இணை இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
ஆனால் கிறிஸ்தவமும் இந்து மதம் போல் பல தெய்வ கொள்கைக்கு வித்திட்ட மதம் தான் ,வர்ணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் மதம் தான் ,விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட மதம் தான் என்பது வேதங்களை  படித்தவர்கள் அறிவார்கள் .
ஏன் இஸ்லாம் ?
வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவன்தான் ..
இறைவன் யாரையும் பெறவும் இல்லை ,யாராலும் பெறப்படவும் இல்லை 
மனிதன் பிறப்பால் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ...எவ்வளவு ஆணித்தரமான கொள்கை 

யாருக்காகவும் இவர்களின் வழிபாடு நிறுத்தி வைக்கபடுவது இல்லை .குறித்த  நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழுகை .
மாற்றாரை மதிக்கும் சிறப்பு ,எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ,என எல்லா விசயத்திலும் இஸ்லாம் என்னை ஈர்த்தது .

ஆம் நான் எனது மார்க்கத்தை  கண்டுகொண்டேன் ..சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் ..மனிதகுலம் செழிக்க வேண்டும் என்றால் இஸ்லாம் தவிர வேறு எந்த கொள்கையும் வழிகாட்ட முடியாது .

ஆரம்பத்தில் எதிர்ப்புகளையும் சிலரின் வெறுப்புகளையும் சந்திக்க நேர்ந்தது ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்காமல் நாம் அடையும் இறைவனின் வெறுப்பை விட  நான்  இஸ்லாத்தை ஏற்றதால் அடைந்த இவர்களின் வெறுப்புகள் ஒன்றும் பெரிது இல்லை .

அன்பான சகோதர,சகோதரிகளே !நான் உங்களுக்கு கூற விளைவது இது தான் 
அசத்தியம் அழிந்தே தீரும் ,சத்தியம் நிலைத்து நிற்கும் .
உங்கள் இறைவன் உண்மையா என பகுத்தறிந்து கொள்ளுங்கள் .
நீங்கள் உண்மை உடையவர்களாய் இருந்தால் வேதங்களையும் அது காட்டும் மதங்களையும் ஆய்வு செய்யுங்கள் .
நமக்கு எதற்கு மதங்கள் என உங்களை புதுமைவாதிகள் என காட்ட முயல வேண்டாம் .
மதங்களை நானும் வெறுப்பவன் தான் ஆனால் மார்க்கத்தை அறிந்து கொள்ளுங்கள் .மனிதன் இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என உணருங்கள் .
நம்மை படைத்த இறைவனை அறிந்து கொள்ளுங்கள் .
இப்படிக்கு 
உங்கள் அன்பு சஹோதரன் 
உமர் அப்துல்லாஹ் (செந்தில் குமார் ) M.E.,
JJ Engineering college
http://www.amjat.blogspot.in/2012/01/blog-post_04.html

வியாழன், 1 நவம்பர், 2012

சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்




லாகூர் : சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா இன்று (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் இன்று காலமானார்.

மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். மர்மடுகே பிக்தாலால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் தாம் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.

மே 24, 1961ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட மரியம் ஜமீலா தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியாகும் முஸ்லீம் டைஜஸ்டில் எழுத தொடங்கினார். அதே பத்திரிகைக்கு எழுதி கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனர் மவுலானா சையது அலா மெளதூதியின் எழுத்துகளில் தன்னை பறி கொடுத்தார் மரியம் ஜமீலா.

மெளதூதியின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானுக்கு 1962ல் சென்று மெளலானாவின் வீட்டோடு தன்னை இணைந்து கோண்டார். பின் பு முஹமது யூசுப் கான் என்பவருக்கு இரண்டாம் தாரமாக தானே முன் வந்து மணமுடித்து கொண்டார்.

மிகச் சிறந்த சிந்தனையாளரான மரியம் ஜமீலா எழுதிய புத்தகங்களில் சில பின்வருமாறு :

§  Islam and modernism
§  Islam versus the west
§  Islam in theory and practice
§  Islam versus ahl al kitab past and present
§  Ahmad khalil
§  Islam and orientalism
§  Western civilization condemned by itself
§  Correspondence between maulana maudoodi and maryum jameelah
§  Islam and western society
§  A manifesto of the Islamic movement
§  Is western civilization universal
§  Who is Maudoodi ?
§  Why I embraced Islam?
§  Islam and the Muslim woman today
§  Islam and social habits
§  Islamic culture in theory and practice
§  Three great Islamic movements in the Arab world of the recent past
§  Shaikh hasan al banna and ikhwan al muslimun
§  A great Islamic movement in turkey
§  Two mujahidin of the recent past and their struggle for freedom against  foreign rule
§  The generation gap its causes and consequences
§  Westernization versus Muslims
§  Westernization and human welfare
§  Modern technology and the dehumanization of man
§  Islam and modern man
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவனத்தை அளிப்பானாக.

புதன், 31 அக்டோபர், 2012

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...

மாஷாஅல்லாஹ்..!!



துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்

றது.


ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.


இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.


தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

அதிரை முஜீப்.
source:http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data%2Ftodayevent%2F2012%2FOctober%2Ftodayevent_October32.xml&section=todayevent
 
NANTRI - அதிரை MUJEEB
புதன், 31 அக்டோபர், 2012

செவ்வாய், 23 அக்டோபர், 2012

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ்
 அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.

32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.


'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.

Reference By : http://suvanappiriyan.blogspot.com/ &
http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html


இவன்

முஹம்மது இக்பால், (MIB)
அமீர் , இஸ்லாமிய தவாஹ் குழுமம் http://www.facebook.com/groups/islamicdawah1


Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

Join via Mobile : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd

சனி, 1 செப்டம்பர், 2012

துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்!

The Islamic Information Centre of the Dar Al Ber Society
துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின்  மொழிப்பெயர்ப்புகள்,  நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஜசக்கல்லாஹ் ஹைர ....
http://www.thoothuonline.com/1500-people-accept-islam-in-dubai/

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இந்திய முழுவதும் ரூ.500 கோடி பணமோசடி செய்த நிறுவனம் மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

சென்னை: நாடு முழுவதும் உள்ள பல கிறிஸ்துவ போதகர்களிடம் பல மடங்கு பணம் திரும்ப தருவதாக கூறி, சுமார் ரூ.500 கோடி அளவிற்கு பணம் வசூலித்து மோசடி செய்த ஜான் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிறிஸ்துவ அமைப்புகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் ஏசுதாஸ் மற்றும் தமிழக போதகர்கள் ஐக்கியம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த போதகர்கள் சிலரிடமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற கிறிஸ்துவ போதகர்களிடம் பழகிய ஜான் பிரபாகரன் என்பவர் போலியான வாக்குறுதிகளை அளித்து ஏராளமான பணத்தை வசூலித்துள்ளார்.
அவரது வாக்குறுதிகளின்படி, மாதம் ரூ.2,100 பணம் கட்டினால், ஒவ்வொரு மாதமும் ரூ.1,250 வீதம் ஆண்டு முடிவில் ரூ.13 ஆயிரத்து 750 கிடைக்கும் என்று கூறினார். மேலும் ரூ.5,250 கட்டினால் ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.33 ஆயிரம் கிடைக்கும் என்று கூறினார்.
ரூ.10 ஆயிரத்து 100 கட்டினால் மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.59 ஆயிரத்து 500 கிடைக்கும் என்றும் ரூ.26 ஆயிரத்து 250 கட்டினால் மாதம்தோறும் ரூ.13 ஆயிரத்து 750 வீதம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 250 கிடைக்கும் என்று கூறினார்.
இதை நம்பிய போதகர்கள், பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அவரிடம் கட்டியுள்ளனர். இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ரூ.500 கோடி வசூலிக்கப்பட்டது.
ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு ஜான் பிரபாகரன் கூறியபடி, தவணை முறையில் பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து கேட்டால் தகுந்த பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறார்.
ஹெவன்லி இன்டர் பெனா மினல் மிஷன் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஜான் பிரபாகரனையும், அதன் நிர்வாகிகளையும் கைது செய்து மோசடி செய்த பணத்தை வசூலித்து தருமாறு கேட்டு கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் 19 போதகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை பணத்தை வசூலித்து ஜான் பிரபாகரனிடம் கொடுத்துள்ளனர். 19 போதகர்களும் மொத்தம் ரூ.7 கோடியே 38 லட்சம் பணம் வசூலித்து, ஜான் பிரபாகரனிடம் கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/08/27/tamilnadu-john-prabakaran-cheated-500-crore-organization-160347.html

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...
பெங்களூர் மாநகரம். 
1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 
இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 
2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 
பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".
3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 
முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 
மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 
இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்? 
சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 
இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 
ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 
ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 
நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 
"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 
இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  
ஒலிம்பிக்ஸ் 2012:
ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).
பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 
இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 
மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 
ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)

நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 
இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 
IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 
எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 
"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 
IERA குழுவினர் 
உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 
நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 
References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
 
ஜசக்கல்லாஹ் ஹைர: http://www.ethirkkural.com/2012/08/2012.html

சனி, 28 ஜூலை, 2012

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!

Muslim performing prayer in Brazil
ரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.
2000-ஆம் ஆண்டு சூழ்நிலை புள்ளிவிபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.
ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிக்கின்றனர்.
http://www.thoothuonline.com/islam-on-the-rise-in-brazils-favelas/

செவ்வாய், 24 ஜூலை, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! – நீண்ட ஆய்விற்கு பிறகு அமெரிக்க பேராசிரியர் தகவல்!

Religion Professor Robert Shedinger
வாஷிங்டன்:உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.
மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்தார்.
“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.
ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியது: ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.

நன்றி :www.thoothuonline.com/jesus-was-a-muslim-claims-us-religions-professor/

புதன், 27 ஜூன், 2012

கர்நாடகா : பாங்கு சொல்ல தடை விதித்த 3 நாட்களில்இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 17ந்தேதி முதல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள், கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். பெங்களூருவை சேர்ந்த "மேகநாதன் தாகூர்" என்பவர் தனது பெயரை "முஹம்மத் யூசுப்" என்று மாற்றிக்கொண்டார். அவரது மற்ற இரண்டு சகோதரர்களான "சரவணத் தாகூர்" "முஹம்மத் யூனுஸ்" என்றும் "ஜூவால தாண்டன்" தனது பெயரை "முஹம்மத் யாகூப்" என்றும் மாற்றம் செய்துக்கொண்டனர். அதே நேரம் இவர்களது தாயார் "சுமத்ரா தேவி" மட்டும் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. தந்தை "காஷி நாத் தாகூர்" பல ஆண்டுகளுக்கு முன்பே மரணித்து விட்டார். படத்தில் உள்ள முஹம்மத் யூசுப் கூறுகையில், தனக்கு ஜமீல் என்ற நெருங்கிய முஸ்லிம் பல மாதங்களாக இஸ்லாத்தின் பல விஷயங்களை போதித்து வந்ததாகவும் "நரகத்தின் அச்சம் மற்றும் சொர்கத்தின் ஆசை" தான், நான் இஸ்லாத்தை ஏற்க முக்கிய காரணம் என்றார், யூசுப். ஒரு பக்கம், ஒலி பெருக்கியில் அதிகாலை பாங்கு சொல்வதையும் பொறுக்க முடியாதவர்கள் உள்ள அதே பெங்களூருவில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படைத்தவர்களும் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
http://maruppu.in/

வெள்ளி, 22 ஜூன், 2012

கருணை இல்லத்தில் பாலியல் தொல்லை : கிருஸ்தவ மதபோதகர் மகன் கைது

சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவி யை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=77899

புதன், 13 ஜூன், 2012

பலமுறை சீரழித்ததாக பெண் புகார்...சென்னையில் பாதிரியார் கைது

சென்னை: தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த பாதிரியார் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் அந்தப் பாதிரியாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்தவர் ரெஜினா. இவர் புனித மேரி என்ற பள்ளியில் பணியாற்றியவர். இவர் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தி்ல பாதிரியாராக பணியாற்றி வரும் பிரேம்குமார் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், கல்யாணம் செய்து கொள்ள மட்டும் மறுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் பிரேம்குமாரைக் கைது செய்தனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இந்த சம்பவத்தால் பரங்கிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamil.oneindia.in/news/2012/06/13/tamilnadu-christian-priest-arrested-rape-case-155639.html

சனி, 12 மே, 2012

நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.

யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?

தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.

யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.

Yaya Toure (Image courtesy - goal.com)

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?

இதற்கு அவர் கூறிய காரணம்,

 "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

MASHAALLAH

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.


EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Not for me! Yaya Toure turns down man-of-the-match champagne on religious grounds - Dailymail, 6th May 2012.link
2.  Soccer and religion meet on the pitch, where the English Premier League considers a change - Yahoo sports, 7th May 2012. link
3. “I Don’t Drink Because I’m Muslim” - On Islam. 7th May 2012. link
4. Yaya toure - wikipedia. link.
5. African footballer of the year - wikipedia. link
ஜசாகல்லாஹ் :  ஆஷிக் அஹமத் அ

புதன், 9 மே, 2012

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற ( டாக்டர் ஜாரி மில்லர் )


Source : By EAGLE EYE (https://www.facebook.com/eagleeyem)
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக
இருந்தது

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்

“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை

ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

0 0


அங்காரா:இஸ்லாத்தின்
இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச்
செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில்
கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும்
இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப்
பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த
நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும்
கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது
என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய்
செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய
கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள
இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான
அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள
கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ்
கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த
நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி
தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு
செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

சனி, 28 ஜனவரி, 2012

வந்தது பணத்துக்காக! கிடைத்ததோ சிறந்த வாழ்க்கை!

அமெரிக்க தொழிலதிபராகவும் பைலட்டாகவும் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட் பெட்டர்ஸன் ஒரு காண்டராக்ட் விஷயமாக சமீபத்தில் ரியாத் வருகை புரிந்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகமாக இவரது கம்பெனி ஒப்பந்தம் எற்படுத்த இருந்தது. இதனால் இங்கு மூன்று மாதங்கள் தங்க வேண்டிய நிர்பநதம் ஏற்பட்டது. கோடீஸ்வரரான இவரது கம்பெனியின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். இரண்டு விமானங்களுக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் சொந்தக்காரர்.



சவுதியில் தங்கியிருந்த ஒரு நாள் இரவு இவரை அழைப்பு வழிகாட்டுதல் மையத்திற்கு பார்வையாளராக அழைததிருந்தனர். அங்கு வந்தவுடன் கூடாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முன்பு இஸ்லாம் பற்றி படித்திருந்ததற்க்கும் தற்போது அவர் காணும் காட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொண்டார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள் அவரிடம் அன்போடு நடந்து கொண்ட முறை அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு என்ன... வழக்கமான மாற்றம். ஆம்... இவரது மனதையும் இஸ்லாம் ஆட்கொள்ளத் தொடங்கியது. மேலும் பல சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டார். சில நாட்களிலேயே மன மாற்றம் வந்தது. ரிச்சர்ட் பெட்டர்ஸன் தனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு தனது பெயரையும் அப்துல் அஜீஸாக மாற்றிக் கொண்டார்.

எலலாப் புகழும் இறைவனுக்கே!

“I came to the Kingdom for a commercial deal. I was so thrilled to make the best deal of my life with God Almighty by converting to Islam,” said Abdulaziz, during the conversion ceremony, commending the Saudi attire and describing it as comfortable and beautiful.

'பணம் சம்பாதிக்குகும் நோக்கில் நான் சவுதி அரேபியா வந்தேன். ஆனால் சிறந்த வாழ்க்கையை தற்போது சம்பாதித்துக் கொண்டு செல்கிறேன். இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பாக என்னிடம் பழகினர். மார்க்கத்தை அனைவரும் தொடர்ந்து கடை பிடிக்கின்றனர். தங்களின் சகோதரனாக என்னை நினைத்து மிகுந்த அன்பு பாராட்டினர்.



நீங்கள இஸ்லாத்தை வெறுமனே படிப்பதால் எதனையும் அறிந்து கொள்ள முடியாது. என்னைப் போல் முஸ்லிம்களோடு ஒன்றாக கலந்து பழகுங்கள. பிறகு இஸ்லாத்தின் சுவையை நீங்களும் பருகலாம். அடுத்த முறை எனது நண்பர்களையும சவுதி அழைத்து வருவேன். நான் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்' என்கிறார் சகோ அப்துல் அஜீஸ்.

25-01-2012
-அரப் நியூஸ்


இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துவதை இது போன்ற கோடீஸ்வரர்கள் இஸ்லாத்தை ஏற்பதின் மூலம் ஓரளவு மட்டுப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.

இந்த செய்தியை படித்த ஒரு கிறித்தவர் கோபத்தில் அரப் நியூஸில் இட்ட பின்னூட்டம்:

WILLIAM JACKSON
Jan 28, 2012 00:08
“A Kuwaiti prince embraced Christianity “- :-)


டிஸ்கி: கண்டிப்பாக இவர் பணத்தாசையால் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டார். ஏனெனில் இவர் கோடீஸ்வரர். அடுத்து இவர் இனி தனது சொத்துக்களை கணக்கிட்டு அதில் 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

'நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள்.'
-குர்ஆன் 3:110
http://suvanappiriyan.blogspot.com/

வந்தது பணத்துக்காக! கிடைத்ததோ சிறந்த வாழ்க்கை!

அமெரிக்க தொழிலதிபராகவும் பைலட்டாகவும் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட் பெட்டர்ஸன் ஒரு காண்டராக்ட் விஷயமாக சமீபத்தில் ரியாத் வருகை புரிந்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகமாக இவரது கம்பெனி ஒப்பந்தம் எற்படுத்த இருந்தது. இதனால் இங்கு மூன்று மாதங்கள் தங்க வேண்டிய நிர்பநதம் ஏற்பட்டது. கோடீஸ்வரரான இவரது கம்பெனியின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். இரண்டு விமானங்களுக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் சொந்தக்காரர்.



சவுதியில் தங்கியிருந்த ஒரு நாள் இரவு இவரை அழைப்பு வழிகாட்டுதல் மையத்திற்கு பார்வையாளராக அழைததிருந்தனர். அங்கு வந்தவுடன் கூடாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முன்பு இஸ்லாம் பற்றி படித்திருந்ததற்க்கும் தற்போது அவர் காணும் காட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொண்டார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள் அவரிடம் அன்போடு நடந்து கொண்ட முறை அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு என்ன... வழக்கமான மாற்றம். ஆம்... இவரது மனதையும் இஸ்லாம் ஆட்கொள்ளத் தொடங்கியது. மேலும் பல சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டார். சில நாட்களிலேயே மன மாற்றம் வந்தது. ரிச்சர்ட் பெட்டர்ஸன் தனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு தனது பெயரையும் அப்துல் அஜீஸாக மாற்றிக் கொண்டார்.

எலலாப் புகழும் இறைவனுக்கே!

“I came to the Kingdom for a commercial deal. I was so thrilled to make the best deal of my life with God Almighty by converting to Islam,” said Abdulaziz, during the conversion ceremony, commending the Saudi attire and describing it as comfortable and beautiful.

'பணம் சம்பாதிக்குகும் நோக்கில் நான் சவுதி அரேபியா வந்தேன். ஆனால் சிறந்த வாழ்க்கையை தற்போது சம்பாதித்துக் கொண்டு செல்கிறேன். இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பாக என்னிடம் பழகினர். மார்க்கத்தை அனைவரும் தொடர்ந்து கடை பிடிக்கின்றனர். தங்களின் சகோதரனாக என்னை நினைத்து மிகுந்த அன்பு பாராட்டினர்.



நீங்கள இஸ்லாத்தை வெறுமனே படிப்பதால் எதனையும் அறிந்து கொள்ள முடியாது. என்னைப் போல் முஸ்லிம்களோடு ஒன்றாக கலந்து பழகுங்கள. பிறகு இஸ்லாத்தின் சுவையை நீங்களும் பருகலாம். அடுத்த முறை எனது நண்பர்களையும சவுதி அழைத்து வருவேன். நான் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்' என்கிறார் சகோ அப்துல் அஜீஸ்.

25-01-2012
-அரப் நியூஸ்


இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துவதை இது போன்ற கோடீஸ்வரர்கள் இஸ்லாத்தை ஏற்பதின் மூலம் ஓரளவு மட்டுப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.

இந்த செய்தியை படித்த ஒரு கிறித்தவர் கோபத்தில் அரப் நியூஸில் இட்ட பின்னூட்டம்:

WILLIAM JACKSON
Jan 28, 2012 00:08
“A Kuwaiti prince embraced Christianity “- :-)


டிஸ்கி: கண்டிப்பாக இவர் பணத்தாசையால் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டார். ஏனெனில் இவர் கோடீஸ்வரர். அடுத்து இவர் இனி தனது சொத்துக்களை கணக்கிட்டு அதில் 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

'நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள்.'
-குர்ஆன் 3:110
http://suvanappiriyan.blogspot.com/