புதன், 13 ஜூன், 2012

பலமுறை சீரழித்ததாக பெண் புகார்...சென்னையில் பாதிரியார் கைது

சென்னை: தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த பாதிரியார் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் அந்தப் பாதிரியாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்தவர் ரெஜினா. இவர் புனித மேரி என்ற பள்ளியில் பணியாற்றியவர். இவர் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தி்ல பாதிரியாராக பணியாற்றி வரும் பிரேம்குமார் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், கல்யாணம் செய்து கொள்ள மட்டும் மறுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் பிரேம்குமாரைக் கைது செய்தனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இந்த சம்பவத்தால் பரங்கிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamil.oneindia.in/news/2012/06/13/tamilnadu-christian-priest-arrested-rape-case-155639.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக