புதன், 7 ஜூலை, 2010

'என் பெயரால் பொய் கூறாதீர்கள்!'' நபி صلى الله عليه وسلم

E-mail

சாதாரண பாமரன் பொய் சொல்லும் நிலை மாறி, சில ஆலிம்கள் தங்கள் 'வாதம்' வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லது முழுக்க முழுக்க சுயஆதாயத்துக்காக ''இறையச்சத்தை தூக்கி எரிந்துவிட்டு'' துணிந்து பொய் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு என்பதை நினைவு படுத்தும் விதமாக...

o என் பெயரால் பொய் கூறாதீர்கள்! ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'வேண்டுமென்றே' என்ற வார்த்தையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)

o என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ((நூல்: இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி)

o இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே! அது ஏன் என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் 'நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பிரிந்தது இல்லை, எனினும் 'யார் என் பெயரால் பொய் கூறினானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு சொல்லை நான் செவியுற்றுள்ளேன். (அதற்கு அஞ்சியே நான் அதிகமாக அறிவிப்பதில்லை) என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக,

அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.(நூல்: இப்னு மாஜா, புகாரி)

o யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, முஸ்லிம்)

o நிச்சயம் பொய் தான் என்று தெரிந்து கொண்டே என் பெயரால் யாரேனும் ஒரு செய்தியைக் கூறினால் அவனும் பொய்யர்களில் ஒருவனாவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)

மேற்கூறிய இதே ஹதீஸே ஸமுரத் இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும், முகீரா இப்னு ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும் இடம் பெற்றுள்ளது. (குறிப்பு: இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக