புதன், 8 ஜூலை, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3

முரண்பாடு 11:

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிலிருந்து யூதாவுக்கும் திரும்பியதைப் பற்றி பைபிளில் இரண்டு ஆகாமங்களில் சொல்லப்படுகின்றது. இதில் பலரின் சந்ததிகளில் எத்தனை எத்தனைப்பேர் தங்கள் சொந்த பட்டினத்திற்கு சென்றார்கள் என்பதில் இந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் பல வசனங்கள் ஒன்றுக்கொண்று முன்னுக்குப்பின் முரணாக சொல்கின்றது. அந்த முரண்பாடுகள் இதோ:

1) அவர்களில் ஆராகின் புத்திரர் எத்தனைப் பேர்?

ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர் - நெகேமியா 7:10

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக எஸ்றா 2 : 6ல் 'ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

ஆராகின் புத்திரர்கள் மொத்தம் எத்தனைபேர் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்?

2) இதேவரிசையில், பாகாத் மோவாபின் புத்திரர்களும் தங்கள் தேசமாகிய யூதா மற்றும் எருசலேமுக்குத் திரும்பினார்களாம். அவர்களின் தொகைiயும் இதே நெகேமியா என்ற புத்தகமும் எஸ்றா என்ற புத்தகமும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது:

யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். - எஸ்றா 2:6

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:11ல் பின்வருமாறு கூறப்படுகின்றது?

யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.

இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

3) இதே வரிசையில் சத்தூவின் புத்திரர்களையும் இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.

சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். - நெகேமியா 7:13

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்ரா 2:8ல் 'சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சரி?

4) இதே வரிசையில் பெபாயின் புத்திரர்களையும் பற்றி இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுவதைப் பாருங்கள்:

பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்தெட்டுப்பேர். - நெகேமியா 7:16

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:11ல் 'பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

5) இதே வரிகையில் அஸ்காத்தின் புத்திரர்கள் எத்தனை என்பது பற்றியும் இந்த இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.

அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். - எஸ்றா 2:12

ஆனால் இதற்கு நேர்முரணாக நெகேமியா 7:17ல் 'அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

6) இதேபோல் இந்த எண்ணிக்கையின் முரண்பாடுகள் இந்த இரண்டு புத்தகங்களிலும் தொடர்ந்துக்கொண்டே போகின்றது:

ஆதொனிகாமின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். - எஸ்றா 2:13

ஆனால் இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:18ல் 'அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்' என்றும் கூறுகின்றது.

7) பிக்டவாயின் புத்திரர்கள் எத்தனைபேர்?

பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர் - நெகேமியா 7:19

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்ரா 2:14ல், 'பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

8) ஆதீனத்தின் புத்திரர்கள் எத்தனைபேர்?

ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். - நெகேமியா 7:20

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:15ல் 'ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.' ஏன்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

9) பேசாயின் குமாரர்கள் எத்தனைப்பேர்?

பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். - ஏஸ்றா 2:17

இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:23ல் 'பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்' என்று கூறப்படுகின்றது. இதில் எது சரி?

10) பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் எத்தனைப்பேர்?

பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். - நெகேமியா 7:32

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:28ல் பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்' என்று கூறப்படுகின்றது.

11) அதுபோல் லோத், ஆதீத் ஓனோ என்பவர்களின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். ஏஸ்றா - 2:33

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:37ல் 'லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்' என்று சொல்லப்படுகின்றது.

12) அபோல் செனாகா புத்திர்கள் எண்ணிக்கையிலும் இரண்டு புத்தகங்களும் நேர்முரனாக கூறுகின்றது.

செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர். - நெகேமியா 7:38ம் அதற்கு மாற்றமாக எஸ்றா 2:35ல் சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர் என்று கூறுகின்றது.

இப்படி எஸ்றா என்ற புத்தகத்தின் 2ம் ஆகமமும் நெகேமியா என்ற புத்தகத்தின்; 7ம் ஆகாமமும் ஒரே சம்பவத்தில் இடம்பெற்ற எண்ணிக்கைகளை முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது. இந்த இரண்டு புத்தகங்களின் வசனங்களும் கர்த்தரின் பரிசுத்தஆவியின் உந்துதலால் தான் எழுதப்பட்டதென்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்?


முரண்பாடு 12:

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இப்படி தங்கள் சொந்த ஊரான எருசலேமுக்கும், யூதாவுக்கும் திரும்பியவர்களின் கணக்கில் இந்த இரண்டு ஆகாமங்களிலும் இவ்வளவு குளறுபடிகள் இருக்க, எப்படி அனைவரின் மொத்த தொகையின் கூட்டல் தொகை ஒரே எண்ணிக்கையாக வரும்? ஆனால் அப்படி ஒரே தொகையாக வந்ததாக இந்த இரண்டு ஆகாமங்களும் அறிவிக்கின்றன.

சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். (பார்க்க எஸ்றா 2:64, மற்றும் நெகேமியா 7:66)

அதாவது ஒவ்வொரு பட்டியலிலும் இரண்டு ஆகாமங்களும் முன்னுக்குபின் முரணாக கூறியிருக்க, சபையாரின் மொத்த தொகையினர் என்று வரும் போது மட்டும் இரண்டு ஆகாமத்தின் தொகையும் 46360 பேர் என்று வந்துவிட்டதாம். இது எப்படி சாத்தியமாகும்? எழுதியவர்கள் சற்று கூட்டிப்பார்த்திருக்க வேண்டாமா? இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், நாம் இரண்டு ஆகாமத்தில் உள்ளதையும் கூட்டியவரை, முறையே எஸ்றா ஆகாமத்தில் 29818 பேரும், நெகேமியா ஆகாமத்தில் 31,089 பேருமே வருகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு ஆகாமங்களிள் வரும் மொத்த சபையாரின் கூட்டுத்தொகையோ 46360 என்று இரண்டு ஆகாமங்களிலும் சொல்லப்படுகின்றது. இந்த தெளிவான முரண்பாடுகளைக்கொண்ட வசனங்களையும் வேடிக்கைகள் நிறைந்த வசனங்களையும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாம?

முரண்பாடு 13:

இவர்களுடன் இருந்த மொத்த பாடகரும் பாடகிகளும் எத்தனைப்பேர்?

இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். - நெகேமியா 7:67

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:65ல் 'இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.' என்று கூறுகின்றது. இதில் எது சரி?


முரண்பாடு 14:

பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொடுத்தான். அதன் விவரங்களை எஸ்ரா 1:1லிருந்து 10 வரை சொல்லப்படுகின்றது.

அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். - எஸ்றா 1 :9-10

ஆனால் இதற்கு அடுத்தவசனத்திலேயே மேலே கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பொன் மற்றும் வெற்றிப் பணிமுட்டுகளெல்லாம் எல்லாம் சேர்த்து மொத்தம் 5400 என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க எஸ்றா 1:11) ஆனால் மேலே 9 மற்றும் 10ம் வசனங்களில் வரும் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் 2499 மட்டும்தான் வருகின்றது. ஆனால் 11ம் வசனத்தில் 5400 என்று வந்துள்ளது. இந்த கணக்கு எப்படி சரியாகும்? கணித அறிவுகூட இல்லாதவரா கர்த்தர்? அல்லது கர்த்தரின் பெயரால் இந்த கதைகள் இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளதா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக