
தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.
தகவல்:
அல் அராபியா.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" - அல்-குர்ஆன்
MUST READ
[ கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் ]
கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம் சமுதாயம் பின் தங்கி உள்ளது.
தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள்.
8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,
+2 வரை படித்தவர்கள் 7.8%,
டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%,
பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,
38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர்,
கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர்,
பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள்
தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி),
கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
இதுதான் முஸ்லிம்சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது.
எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லிம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்
பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லிம்சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும்.
மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே முஸ்லிம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்லிகளை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள்முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.
அனைத்து முஸலிம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம். உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.
எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை.'' அல்-குர்ஆன்(8:53)
பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.
அகிலங்களின்ன இறைவனிடமிருந்து இது இறக்கப்பட்டது என்று பிரகடனம் செய்யும் ஒரே இறைநூல் திருக்குர்ஆன்! (26: 192) மானிடரும் ஜின் இனமும் ஒன்றிணைந்து முயற்சி செய்தாலும் இதற்குச் சமமான ஒரு நூலைக் கொண்டு வர இயலாது என்று அறைகூவல் விடுக்கும் ஒரே வேதம்! (2:23, 17:88) மாறுதல்களோ, முரண்பாடுகளோ தவறுகளோ அதனை நெருங்காது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்ட ஒரே வேதமும் திருக்குர்ஆன் மட்டுமே! (4:82, 15:9, 41:42)
அன்று முதல் இன்று வரை இறை மறுப்பாளர்கள் திருக்குர்ஆனை விமர்சித்து வந்த போதிலும் அவை எல்லாவற்றையும் கடந்து இன்றளவும் மேலோங்கி நிற்கும் சிகரமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இறைவனின் அறைகூவலுக்கு எதிராக திருக்குர்ஆனைப் போன்று ஒரு நூலை உருவாக்க முயன்றவர்கள் இறுதியில் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டு இதற்கு முன் சரணடைந்ததே சரித்திரமாக உள்ளது.
அன்றைய இறை மறுப்பாளர்களைப் போன்று இன்றைய காலகட்டத்திலும் மேற்கத்திய, கீழைத்தேயத்தவரும் யூத கிறிஸ்தவ விமர்சகர்களும் திருக்குர்ஆன் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் திருக்குர்ஆனில் சரித்திர தவறுகள் உள்ளன என்பதுவாகும். குறிப்பாக சில கிறிஸ்தவர்கள் இதை ஒரு பிரச்சாரமாக ஆக்கி கிறிஸ்தவத்தை வளர்துக்கொள்ள முயன்று வருகின்றனர். திருக்குர்ஆன் மீது அவர்களால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்பதுடன் அவர்களுக்கே எதிரான ஆதாரங்களாக அவை அமைந்துள்ளன என்பதை இத்தொடரில் நாம் நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்!
திருக்குர்ஆனில் பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. ஆதி பிதா எனப்படும் ஆதம் (அலை) அவர்கள் முதற் கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர்கள் மற்றும் சான்றோர்களைப் பற்றிய வரலாற்றத் தகவல்கள் திருக்குர்ஆனில் உள்ளன. இத்தகைய வரலாறுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒரு படிப்பினையாகவே அவை தேவைக்கு ஏற்றார் போல் தேவைப்பட்ட இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதேயன்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் போன்று காலக் கிரம வரிசைப் படி சம்பவங்களை வரிசைப் படுத்திச் சொல்லவில்லை. காரணம் திருக்குர்ஆன் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் புத்தகம் அல்ல. நன்மை தீமையைப் பிரித்தறிவித்து மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நல்லுபதேசமாகவும் அருளப்பட்ட வேதம்! திருக்குர்ஆனைப் பொறுத்த மட்டில் மக்கள் படிப்பினை பெறும் அளவுக்கு போதுமான வரலாற்று சம்பவங்கள் மிகத் தெளிவாகவும் முரண்பாடுகளின்றியும் குழப்பங்களின்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனில் வரலாற்றுச் செய்திகள் என்ன நோக்கத்திற்காக விவரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்தும் ஏதேனும் சில வசனங்களைக் காண்க:
“நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன” (11:120)
”நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்” (12:3)
”திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்” (40:78)
மேற்கண்ட வசனங்கள் நமக்கு தரும் செய்திகள்:
தன்னைப் போன்ற ஒரு தூதுப் பணியுடன் தனக்கு முன்னரும் இறைதூதர்கள் அனுப்பப்ட்டிருக்கின்றனர். தனக்கு ஏற்பட்டது போன்ற இன்னல்கள் அவர்களுக்கும் ஏற்பட்டது என்பதை விளக்குவதன் மூலம் இறைதூதரின் உள்ளத்தைத் திடப்படுத்தவும், இறை நம்பிக்கையாளர்கள் வரலாற்றுச் செய்திகளின் மூலம் படிப்பினையும் நல்லுபதேசமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உள்ளம் அதனால் பண்பட வேண்டும் என்ற நோக்கிலும் தான் வரலாறுகள் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள எந்த வரலாற்றுச் செய்திகள் குறித்தும் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை.
மனித சமூகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான இறைதூதர்க்ள அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அளனவரின் வரலாறும் திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. அவர்களில் சிலரது வரலாறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.
திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தெழுகை தொழுகையிலும், மற்ற நேரங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் திருக்குர்ஆன் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே பைபிளைப் போன்று ஒரு கதை சொல்லும் பாங்கில் இருந்திருந்தால் அது மிகப் பெரிய புத்தகமாகி ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் கடினமாகி திருக்குர்ஆன் ஏட்டளவில் ஒதுங்கியிருக்கும். கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நடமாடும் குர்ஆன்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க. இது போன்று பைபிளை முழுக்க மனப்பாடமிட்டவர்கள் என்று உலகில் எத்தனை பேரைக் காட்ட முடியும்?
திருக்குர்ஆனில் ஒரே இறைதூதரைப் பற்றிய வரலாறுகள் பல அத்தியாயங்களில் தேவைக்கு ஏற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவை நினைவில் நிற்பதற்கு எளிதாகவும் இறைநம்பிக்கையை அதிகரிக்கவும் தோதுவாக இருக்கிறது.
“அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து – விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன – இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை” (39:23)
பைபிளில் இடம் பெறாத இறைதூதர்களின் வரலாறுகளும், பைபிள் குறிப்பிட்டு்ள்ள இறைதூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பைபிள் குறிப்பிடாத நிகழ்ச்சிகளும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இது எல்லாவற்றையும் அறிந்த இறைவனால் அருளப்பட்ட இறைநூல் என்பதற்கான சான்று ஆகும்.
பைபிள் என்பது தீர்க்கதரிசிகளின் வரலாற்றை பிற்கால எழுத்தர்களால் தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூற்களின் தொகுப்பு ஆகும். உதாரணத்திற்கு உபாகமம் 34 ஆம் அத்தியாயம் மோசேயின் வரலாறு பற்றிக்கூறும் போது மோவாப் என்ற தேசத்தில் அவர் இறந்ததாகவும் அவரது கல்லறை எங்குள்ளது என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மோசேக்கு இறக்கப்பட்டதாக கிறிஸ்தவர்கள் கூறும் தோராவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இவ்வத்தியாயத்தில் மோசேவின் இறப்புச் செய்தியும் அவரது கல்லறையை யாரும் அறியவில்லை என்பது குறித்தும் வந்துள்ள செய்தி இது யாராலோ எழுதப்பட்டது என்பதற்கான சான்றாக உள்ளது. இது குறித்து கிறிஸ்தவ அறிஞர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஏராளமான ஆசிரியர்களைக் கொண்டு பைபிள் தொகுக்கப்பட்டிருப்பதால் அதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துள்ளன.
என்றோ நடந்து முடிந்த சம்பவங்களைக் குறித்து அதற்கு நேரடி சாட்சியம் வகித்த ஒருவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக அது குறித்து எந்தத் தகவலையும் அறிந்திராத ஒருவர் மூலமே உலகம் அதைக் கேட்டது. அதிலும் முரண்பாடுகள் எதுவுமன்றி மிகவும் நேர்த்தியான தகவல்கள்! ஒரு கதை சொல்லும் பாங்கை விட “நீர் சொல்வீராக!” “நீர் ஓதிக் காட்டுவீராக!” நாம் விளக்கிக் காட்டுகிறோம்” என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வசன நடைகளில்! அதை உலகுக்கு அறிவித்தவரோ அகிலங்களின் இறைவனிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றது என்று கூறுகிறார்! அவ்வாறு வருவதாக அவர் கூறும் செய்திகளோ அற்புதமாகவும் நேர்த்தியாகவும், முரண்பாடுகளின்றியும், தெளிவாகவும், கேட்பவரின் உள்ளங்களை சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கின்றது. தனது நாற்பது வயது வரை அவரிலிருந்து வெளிப்படாத அற்புதங்கள் வெளிப்படுகின்றன! அரைக் குறித்து பொய்யர் என்றோ மோசடிக்காரர் என்றோ எந்த குற்றச்சாட்டும் அவரது சமூகத்தில் இல்லை. மாறாக தனது சமூகத்தில் மிகவும் நல்லவராகவும் கண்ணியம் மிக்கவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்து அவர் பொய்யுரைக்கிறார் என்று எங்ஙனம் கூற இயலும்? அவர் கூறும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதல்லவா அறிவுடைமை? இத்தகைய நடுநிலையான சிந்தனையின் மூலம் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்திகளை ஆராய்வோமானால் எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட செய்திகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)
திருக்குர்ஆனின் சரித்திரத் தவறுகள் என எந்தெந்த செய்திகளை கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ, அதே செய்திகள் கூட பைபிளை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து திருக்குர்ஆனின் தனிச்சிறப்பையும்பும் ஒரு இறைநூலுக்கே உரிய அதன் கம்பீரத்தையும் பறைசாற்றி நிற்கிறது என்பது தான் அற்புதமான செய்தியாக உள்ளது. சரித்திரத் தவறுகள் என்ற கிறிஸ்தவர்களின் மேற்கோள்களையும் அதற்கான விளக்கங்களையும்தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம். இன்ஷா அல்லாஹ்!